’’கண்டேன் அனுமனை’’….!
கிரேசி மோகன்
——————————————————-
’’சுந்தர காண்ட சுருதி உரைத்திடும்
மந்திர வாசக மாருதியே -எந்திரமாய்
உண்டுறங்கி ஓய்ந்தேன்! உலகக் கிணற்றில்
மண்டூகம் ஆச்சே மதி’’….
”திருத்துழாய் காட்டில் கருத்துடன் ராமன்
திருப்பெயர் ஓதும் தவமே -மருத்துவக்
குன்றேந்தி வந்தோய் குணமயக்கம் போக்கிட
இன்றேந்தி வாருமய்யா இங்கு”….கிரேசி மோகன்….!