’கண்டேன் அனுமனை’’….!
——————————————————

kesav

இந்திர ஜித்தனின் தந்திரக் கட்டகல
எந்திர வேகத்தில் ஏகிய -சுந்தரன்
வெற்ப்பெடுத்து வந்தவனின் வீரக் கழல்களை
நிர்பயம் கொள்ள நெருங்கு….

எங்கு இராமன் காதை நிகழ்ந்தாலும்
அங்கு விழியிலா னந்தபாஷ்பம் -பொங்கிவர
கைத்தாளம் இட்டு குதூகலிக்கும் மருதியின்
மெய்த்தலம் சிந்திக்க மாண்பு….

”மருந்துண்ணும் போது மறவேல் குரங்கை,
குரங்கில் அனுமனைக் காண!, -மருந்தாகும்
சஞ்சீ வினியாக, சாகா வரம்பெற்று,
உன்ஜீவன் வாழும் உலகு’’….
அணிலுக்கு மூணு கோடு
அனுமனுக்கு ஆலிங்கனம்
வேலைக்கு ஏத்த கூலி….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *