பூமாலை சேர்த்தென்ன பாமாலை வார்த்தென்ன
ராமா யணத்தை ருசித்தென்ன -கோமான்
அபரிமித அன்பை அருள்வது பக்தை
சபரிதரும் எச்சிற் சுவைக்கு…கிரேசி மோகன்….!

 

கல்கி கேள்வி-பதில் தொடரில் வாசகர்
”நாகராஜன் கையில் கல்கி” என்ற ஈற்றடிக்கு
வெண்பா கேட்டபோது எழுதியது….
———————————————————–
பூட்டிக் கிடந்ததன் வீட்டுச் சாவியை
வேட்டியில் வைத்து முடிந்ததை -PARTYயில்
தாகசாந்தி யால்மறந்து தாளுடைத்தான் செங்’கல்’லால்
நாகராஜன் கையில்கல் கி(KEY)….கிரேசி மோகன்….!

 

குடம் உருளும் காளிதாசன் பாடல் டைப்பில்
——————————————————–
காமம் ஒழிந்த அதிகாலை வேளையில்
ராமன் அபிஷேக நீர்குடத்தை -தாமசமாய்
ஏந்திழையோர் போட்டுவிட ஏழு சுரங்களில்
தாம்திமித்தோம் தாளம் பிறப்பு….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *