கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”வேதப் பரிபுரை வீற்றிருக்க , கோபாலர்
காதைவெண் சங்கால் குடைகிறார்: -வேதாந்த
தேசிகரின் விம்சதி தேவி மகாத்மியத்தை,
கேசவ் வரைந்த கவி’’….கிரேசி மோகன்….!
”காதாகி கோபாலர் வேதாந்த விம்சதியை
ஊதுவது ஞானத்தின் உற்சாகம், -போதமர்(போது -மலர்)
வாணியும் கூடவே வாசிக்கிறாள், சாரங்க
பாணிமடி பாரதிப்(சரஸ்வதியின் இன்னொரு பெயர் பாரதி) பூ’’….கிரேசி மோகன்….!