tamilnewyear
விரும்பியவை சேர விரும்பாதன போக
கரும்பதனைக் கூலியோடு கொள்ள -வரும்புதி
ஹேவிளம்பி ஆண்டே ஹடக்கிரீவர் கண்ணனால்
வாவிளம்பு தீதைத்த விர்த்து’’….!
OXYMORON TYPE வெண்பா
———————————————

குருட்டு மலடி குழந்தையைப் பெற்றாள்
திருட்டுத் தனமாய்க் கனவில் -இருட்டில்
பிறந்தஅப் பிள்ளைக்குப் பாலூட்டும் போது
விருந்தானாள் வாய்க்குள் விழைந்து….

பாயில்ட் வெஜிடபில்ஸ், பச்சரிசி சாதத்தில்
ஆயில்ட் சாம்பார் அடிக்கரைசல் -சாயில்ட்
சாத்தமுது சாதம் சுவையா ணநீர்மோர்
ஆத்தமுதே என்ஸ்பெஷல் ஆம்….

 

ஆச்சார்ய ஸ்வாமிகள் மேல் எழுதியது….
————————————————–
வானிடம் விட்டிந்த வையத்தில் சங்கரன்
மானுடமாய் வந்தயெம் மாமுனியே -ஊணுடல்
ஏகினும் வாஞ்சையாய் ஏளினாய்க் காஞ்சியில்
பாஹிமாம் பாதாம் புஜம்.

அரியவா காப்பில், அரனவா சேர்ப்பில்
குறியவா அன்பே கடவுள் -பெரியவா
பட்டுத் தறியவா விட்டு வறியவா
கட்டும் கதரவா கட்டு….
பரணீதரனின் ”அன்பே அருளே” படித்த போது….
—————————————————————–
அன்பே, அருளே, அரனே, அறம்பொருள்
இன்பம் வசிக்கும் இருப்பிடமே -பண்பே
பெரியவா நின்னைப் பணிந்தேன், மனதில்
சிரிஅவா பொங்கிடச் செய்….
குருவாரம் ஆச்சார்யாள் ஜெயந்தி….
————————————————————-

”காலடி மைந்தனாய் கோவிந்த FATHERரின்
காலடியில் கற்க, கயிலையின் -ஆலடி
சங்கரனே அத்வைதம் ஸ்தாபிக்கத் தோன்றினன்:
இங்கரனே வந்தநாள் இன்று’’….கிரேசி மோகன்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *