மாணவர்களுக்கு எளிதாகக் கல்விக்கடன்!

0

பவள சங்கரி

கால்கடுக்க, வங்கி வங்கியாக நடந்து காலவிரயம் ஆகாமல் எளிய முறையில் தகுதி வாய்ந்த மாணவர்கள் கல்விக்கடன் பெற்று சிரமமில்லாமல் பயின்றுவர ஒரு புதிய இணையத்தொடுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வித்யாலஷ்மி – VIDYA LAKSHMI என்பது அனைத்தும் ஒருங்கிணைத்த ஒருவழி சாளரம். தேசிய, மாநில கல்வி உதவித் தொகைகள் வழங்கும் அனைத்து வங்கிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் கல்விக்கடன் பெறவேண்டி இனி ஏதோவொரு வங்கி வாசலில் சென்று நிற்கத் தேவையில்லை. இந்த இணையதளத்தில் சென்று அங்கு உள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்தாலே போதும். அனைத்து வங்கிகளும் தானே அதைப்பதிவிறக்கம் செய்து நடவடிக்கை எடுப்பார்கள். இதனுடைய நிலைபற்றி அவ்வப்போது அறிந்துகொள்ளும் வகையில் அந்தந்த விண்ணப்பப்படிவங்கள் பற்றிய நிலைப்பாடுகள் பதிவு செய்யப்படுகின்றன.

கல்வித்தகுதி அடிப்படையில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கு 7 1/2 இலட்சம் ரூபாய் வரை பெறுவதற்கு எந்தவிதமான செக்யூரிட்டியோ அல்லது மூன்றாம் நபர் உத்திரவாதமோ தேவையில்லை. கடன் தொகை 7 1/2 இலட்சத்திற்கும் மேல் இருந்தால் உத்திரவாதமும், மூன்றாம் நபர் உறுதிமொழியும் அளிக்கப்படவேண்டும். இதே நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கு 4 இலட்சம் ரூபாய் வரை மூன்றாம் நபர் உத்திரவாதமும், அல்லது சொத்து பணயமும் தேவை. படிக்கும்போதே தொகையை திருப்பிச்செலுத்த தொடங்குபவர்களுக்கு வட்டியில் 0.5 % , பெண்களுக்கு 0.5% வட்டி தள்ளுபடி வழங்கப்படுகிறது என்பது கூடுதல் நன்மை.

The applicant should register and login to Vidya Lakshmi portal and then fill-up the Common Education Loan Application Form (CELAF). After filling the form, the applicant can search for suitable loans across banks and apply as per their needs, eligibility and convenience.
All the best Students! Cheer up!

https://www.vidyalakshmi.co.in/Students/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *