“அனைவரும் உழைப்பாளிகளே”

0

சித்ரப்ரியங்கா ராஜா

          FB_IMG_1493606894685

 

 

 

 

 

 

 

 

 

அகிலம் காத்து அருளும் தெய்வமாய்

ஆருயிர் தந்து நம்முயிர் காக்கும் பெற்றோராய்

இறுகிய மனதை இளகச் செய்யும் கலைத்துறையினனாய்

ஈடற்ற சாகசங்களால் சாதனை படைக்கும் மாணவனாய்

உழைப்பே உயர்வென நம் சோற்றிற்கு வியர்வை சிந்தும்  உழவனாய்

ஊழிகள் பல  களைவதில் நல்ல மருத்துவனாய்

எத்தனை இடர்வரினும் நாட்டு எல்லையில் எதிர்கொள்ளும் இராணுவ வீரனாய்

ஏற்றங்கள் பல நல்கும் ஆற்றல்மிகு பொறியாளனாய்

ஐயங்கள்அகற்றி அறிவை விருத்திக்கும் ஆசிரியனாய்

ஒருவர் இருவரல்ல பலகோடி இவர் போன்றோர்!

ஓய்விற்குப் பின்னும் சோராது உழைக்கும்

சீரிய நல்மனிதர் இவர் அனைவரும்   உழைப்பாளிகளே!

அண்டம் முழுதும் உள்ளோர் இன்று

என் அன்புக் கவிதையின் உள்ளே அடக்கம் !

யாதேனும ஒருவரை யான்விட்டு இருப்பின்

சினமேனும் கொள்ளாது சிறியேன்

பிழைபொறுத்து அருள்க!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *