ரா.பார்த்தசாரதி

 

இறைவனே ஏன் என்னை படைத்தாய் என நினைக்கும்போது

என் கண்ணெதிரே  கைகால் இழந்தவன்  காட்சியளிக்கின்றான்

ஊன்று கோல் துணையுடன் அருகில் வந்து கைநீட்டுகின்றான்

உனக்கும் கீழே பல கோடி  என இறைவன் அறிவுறுத்துகின்றான் !

 

தள்ளாத வயதில் கீரை விற்கும் கிழவியின் தன்னம்பிக்கை

சாலையோரத்தில்  காலணி தைக்கும் தொழிலாளியின் நம்பிக்கை

சாலையில் குப்பை கூட்டுபவர்களின் அன்றாட வாழ்க்கை

மூட்டை சுமந்து கஷ்டப்பட்டு கூலிக்காக வாழும் வாழ்க்கை !

 

வெய்யில் மழை பாராமல் கூவி கூவி விற்கும் பூக்காரி

நடை பாதையில் பழரசம் தேநீர் விற்கும் வியாபாரி ,

பாதையோரத்தில், சிறு பொருட்களை விற்கும் வியாபாரி,

நொண்டியானாலும், பேனா விற்கும் ஒரு  சிறு வியாபாரி !

 

மனிதன் பிறக்கும்போது, ஏழை,பணக்காரனாய் பிறப்பதில்லை

அவனவன், படிப்பாலும், தொழிலாலும்,மாறுபடாமல் இருப்பதில்லை

படிக்காதவன் இழிந்த செயலை செய்வதற்கு தயங்குவதில்லை

வாழ்க்கை எனும் படகை செலுத்த மனிதன் சோர்வடைவதில்லை !

 

வாழ்க்கையை, வாழ்க்கையாலே  இறைவன் பிரிக்கின்றான்

இறைவன் விளையாட்டை  நம்மிடம்  காட்டுகின்றான்

தோல்விகண்டு துவளும்போது பல செயல்களை நடத்துகின்றான்

அவற்றை கண்டு நம் மனதில் நம்பிக்கை பிறக்க வைக்கின்றான் !

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *