தமிழ்த்தேனீ

சபேசனுக்கு  இன்னும் கொஞ்சம் வெண்டைக்காய் போடு அவனுக்கு சின்ன வயசிலேருந்தே வெண்டைக்காய் பிடிக்கும் என்றார்  கண்ணன்
கன்ணனின் மனைவி ஆனந்தி நிறைய இருக்கு சபேசன் அண்ணா கேட்டு சாப்பிடுங்க என்றாள்  

சரி ஆனந்திம்மா  போடும்மா  சாப்படறேன் என்றபடி சாப்பிட்டுக்கொன்டே
டேய் கண்ணா  இந்த  வாழ்க்கையிலே  நம்மைச் சுத்தி மனுஷ வடிவிலே இருக்கற  நரி பூனை சிங்கம் கரடி காட்டுநாய்,ஓநாய் மாதிரி இருக்கற மனுஷாகிட்டேருந்து நம்மளைக் காப்பாத்திண்டு ஓடறது இருக்கே

அதுதாண்டா  பெரிய திறமையான காரியம்
அப்பிடி ஓடி ஓடியே நாம ரெண்டு  பேரும் ஏதோ  நம்மாலான நம்மோட பொறுப்புக்களையெல்லாம் நிறைவேத்தி பிள்ளங்களையெல்லாம் படிக்கவும் வெச்சு  கல்யாணமும் செஞ்சு வெச்சு நிமிந்துட்டோம் , அதுனாலே  நிம்மதியா இருக்கு  என்றார்  கண்ணன்

ஆமாம் கண்ணா நாம எங்கேயாவது  தவறும் போது உன் பொண்டாட்டி உன்னையும்  என் பொண்டாட்டி என்னையும் , அதே மாதிரி அவங்க  தவறும் போது நாமளும் அவங்களுக்கு  சொல்லிக் குடுத்து  இழுத்துண்டு ஓடித்தானே  இப்பிடி வளந்திருக்கோம்  என்றார் சபேசன்

சபேசா  இப்போ  நினைச்சுப் பாக்கறேன்  நீ இதோ இருக்காளே கனகா இவளை நீயும் இவ உன்னையும் இழுத்துண்டு ஓடிட்டீங்கன்னு ஊரே  உங்களை  கரிச்சுக் கொட்டித்தே என்றார்  கண்ணன்

கண்ணா   நீ ஆனந்தியைக் கல்யாணம் செஞ்சிண்டு இழுத்துண்டு  இவ்ளோ தூரம் வாழ்க்கையிலே ஓடி வந்திருக்கே
நான்  இந்தக் கனகாவை இழுத்துண்டு ஓடிப் போயி கல்யாணம் செஞ்சுண்டிருக்கேன். 

ஆனா  நாம ரெண்டு பேரும்  இன்னமும் 60 வயசாகியும் இன்னமும்  இழுத்துண்டு  ஓடிண்டேதானா  இருக்கோம் . பாதியிலே  விட்டுட்டு ஓடிடலையே  அதுதான்  விசேஷம்  என்றார்  சிரித்துக்கொண்டே

ஆமா  சபேசா ஆனா இப்போ  இழுத்துண்டு ஓடிப்போய் பாதியிலேயே  விட்டுட்டு போயிடறாங்களே  அதுதான் ப்ரச்சனையா இருக்கு என்றார் கண்ணன்

போறும்  வழியாதீங்க  என்று ஆனந்தியும் கனகாவும் ஏகோபித்த குரலில் சொன்னார்கள் , இழுக்கறதாம் ஓடறதாம்  வாழ்க்கையிலே  ரெண்டு பேருமே சேர்ந்து ஒத்துமையா இழுத்துண்டு ஓடினாத்தானே  வண்டி நல்லா  ஓடும்   என்றாள் ஆனந்தி
அதானே  என்றாள் கனகா


               சுபம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *