சும்மாவே இருந்திருந்து, சோம்பித் திரிந்திடுவார்

வாழ்க்கை வெறுத்துவிட்டது என புலம்புவார்

தன் கையில் எல்லாம் வரவேண்டுமென எதிர்ப்பார்ப்பார்

இருப்பிடம் விட்டு நகர்வதற்கும் காலதாமதம் செய்வார் !

 

 

உடம்பை சுமையாய், மனசை பாலைவனமாய்

வாழ்க்கை வறண்டதாய் என்றும் நினைத்துடுவார்

இதுவா வாழ்க்கை என உள்ளுக்குளே புலம்பிடுவார்

வீணாய் போன, நாட்கள் ஆயுள் பகுதியால் மறைத்துடுவார் !

 

 

வெந்த சோற்றை தின்று விதிவசத்தால் இறப்பாயா

வாழ்வின் ஓவ்வொரு கணமும் சுவைக்க பழக மாட்டாயா

ஓவ்வொரு விடியலும்,தனக்காகவே என எண்ணமாட்டாயா

வாழ்க்கை வாழ்வதற்க்கே எனவும் நினைக்கமாட்டாயா !

 

 

உன்முன் பறந்து விரிந்த வர்ணம் சொல்லவில்லை

பரந்த மனப்பான்மை கொண்டு பார்க்க மனமில்லை

காலையில் சூரிய கிரணங்கள் கண்களை கூசாமலில்லை

இன்னும் உன் சோம்பேறிதனத்திற்கு முடிவு இல்லை!

 

 

உன் மனம் அழுக்கு மூட்டை அல்ல

வேண்டாத அழுக்கை மனதிலிருந்து நீக்கு

நல்லெண்ணத்தை மனமெனும் பூந்தொட்டியில் செருகு

புது,புது எண்ணங்களை எண்ணி வாழ்வை புதிதாக்கு !

 

 

உனக்கேயின்றி ஊருக்காக உழைத்துப் பார்

உனக்குள் ஏற்படும் உற்சாகத்தை நினைத்துப் பார்

மரணம் என்பது மனிதனுக்கு நிரந்தரம் என நினைத்திடு

உன்னத வாழ்க்கை வாழ்ந்து, புகழினை அடைந்திடு !

 

 

ரா.பார்த்தசாரதி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *