எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா 

 

 

கலியுகத்தின் தெய்வமே – கந்தப்பெருமானே
நிலைபெறவே வேண்டுறேன் – கந்தப்பெருமானே

பவவினைகள் போக்கிடுவாய் – கந்தப்பெருமானே
பாவிகளைக் காத்திடுவாய் – கந்தப்பெருமானே

முத்தமிழாய் முகிழ்த்தவனே – கந்தப்பெருமானே
சொத்தெனவே நிறைந்தவனே – கந்தப்பெருமானே
சத்தியமாய் உள்ளவனே – கந்தப்பெருமானே
சகலசெல்வம் ஆகியுள்ளாய் – கந்தப்பெருமானே

நித்தமுனைப் பாடிநிற்க – கந்தப்பெருமானே
நினதருளைத் தந்திடுவாய் – கந்தப்பெருமானே
அத்தனையும் உன்னிடத்தில் – கந்தப்பெருமானே
அடைக்கலமாய் அளித்திடுவேன் – கந்தப்பெருமானே !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *