கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
தூங்க வருகவே
——————————–
”மாணிக்கக் குறளன் மாவலி ஈன்ற
காணிக்கை ஏற்றுக் கால்களை நீட்டி
வானுக்குத் தாவி களைத்தவன் எந்தன்
ஊனுக்குள் கலந்து தூங்க வருகவே”….கிரேசி மோகன்….!
”மாட்டுக்கு முன்னாடி(பாதம்), மந்திக்கு பின்னாடி(முதுகு)
கோட்டுக்குள்(கேசவ் வரைந்த கோடு) குந்திய கேசவர் -காட்டுக்குள்(வனவிஹாரி)-
வானரம் ஏந்துகிறார்(ராமாவதாரத்தில் மாருதி வாகனர்) வாத்ஸல் யமுதுகால்
ஆ!நரனாய் வந்தவரின் அன்பு’’….கிரேசி மோகன்….!