செந்தில்

தலைவனுடன் அவளுக்கு
அடங்கா காதலும் இல்லை,
பெரிய ஊடலும் இல்லை.
பிரியுந்துயரம் இல்லை,
தூதனுப்ப எண்ணமும் இல்லை.
வினைவென்று திரும்பியவனிடம்
தலைவி சொன்னாள்,
“பசங்களுக்கு ஹோமஒர்க் சொல்லிக்கொடுங்க,
நா டின்னர் ரெடி பண்ணனும்.”!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *