வாழ்க்கை என்னும் பாதையில்
க. பிரகாஷ்
உவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை
நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
திருமலையம்பாளையம் – 105
கடந்தோம் கடந்தோம் காலத்தைக் கடந்தோம்!
கலந்தோம் கலந்தோம் கற்பனை என்ற களத்தில் கலந்தோம்!
இணைந்தோம் இணைந்தோம் காதல் என்ற இணைப்பில் இணைந்தோம்!
வரைந்தோம் வரைந்தோம் நம் உள்ளத்திலிருந்த காவியத்தை வரைந்தோம்!
அளந்தோம் அளந்தோம் அன்பினை அளந்தோம்!
தளர்ந்தோம் தளர்ந்தோம் உடலால் தளர்ந்தோம்!
வளர்ந்தோம் வளர்ந்தோம் மனதால் வளர்ந்தோம்!
கூடினோம் கூடினோம் கூடலில் புணர்ந்தோம்!
புணர்ந்தோம் புணர்ந்தோம் !தாய்தந்தையாகத் தொடர்ந்தோம்!
இனிதாய் வாழ்ந்தோம்!
வாழ்ந்தக் காலங்களில் விட்டுகொடுத்தே இருவர் ஒன்றானோம்!
உள்ளமோ ஒன்றே! நம் உடல் மட்டும் இரண்டே!
உயிரும் நமக்குள் ஒன்றனல் நன்றே!
விதியின் வழிச் சென்றே இலக்கினை அடைந்தோம்!