வாழ்த்தி வரவேற்போம்!
பவள சங்கரி
குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மேதகு ராம்நாத் கோவிந்த் அவர்களை வாழ்த்தி வரவேற்போம்! எளிமைக்கும், தியாகத்திற்கும் அடையாளமாக விளங்கிய டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் , சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டாக்டர் சங்கர்தயாள் சர்மா போன்றவர்கள் குடியரசுத் தலைவர்களாக இருந்து நாட்டிற்கு தன்னலமிலாத் தொண்டளித்ததைப்போன்று கட்சிப்பாகுபாடின்றி, நம் இந்திய நாட்டிற்குரிய உயரிய மரபைக்காத்து மக்களுக்காகவே தாம் என்று பணியாற்ற நமது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம்.
பதவியில் இருந்தபோதும், பதவிக்காலம் முடிந்தபின்பும் மக்கள் மனதில் குடியரசுத் தலைவராகவே வாழ்ந்து மறைந்த மேதகு அப்துல் கலாம் போன்று எளிமையும், நேர்மையும், தன்னலமற்றும் சேவையாற்றவும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வோம்.