பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் அறியாமையா?
பவள சங்கரி
நடந்து முடிந்துள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் 99% மேலாக வாக்களித்து நமது பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர். இவர்களில் 77 சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்லாத வாக்களித்துள்ளனர். இது மிகவும் வேதனைக்குரிய விசயம். இந்த 77 உறுப்பினர்களின் வாக்குகளின் மொத்த மதிப்பு 20,000 வாக்குகள். இந்த 20,000 வாக்குகள் என்பது பல இலட்சம் மக்களின் பிரதிநிதித்துவத்தைக் கேலி செய்யும் விதமாகவே உள்ளது. தங்களுடைய முதலாவது, இரண்டாவது விருப்ப வாக்குகளை பதிவு செய்யாது இருந்தாலே அந்த வாக்குகள் செல்லாத வாக்குகளாக எடுத்துக்கொள்ளப்படும். இந்த 77 உறுப்பினர்கள் கட்சி அபிமானத்தோடு தங்களுடைய வாக்குகளை பதிவு செய்திருந்தாலோ அல்லது அறியாமையால் செய்த தவறு என்றாலும் அது கண்டனத்திற்குரியது. சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு சம்பளமாக பல இலட்சங்களும், இதர செலவுகளுக்காக பல கோடிகளும் மக்கள் பணம் செலவு செய்யப்படுவது வருத்தத்திற்குரியது. தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் இதுபற்றி சரியான நடவடிக்கை எடுத்தால் அடுத்து வரப்போகும் பொதுத்தேர்தலுக்கு இது ஒரு வழிகாட்டுதலாகவும் அமையும்.