விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்!
பவள சங்கரி
பயங்கரவாதிகள் பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகளை நீக்கி ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் நிதி ஆதாரங்களை முடக்கி வைத்ததை இரத்து செய்தும் அறிவிப்பு வந்துள்ளது. இதன் மூலமாக விடுதலைப் புலிகளின் அமைப்பின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வு கிடைத்திருக்கிறது.