மீண்டும் முதல்வராகிறார்!
பவள சங்கரி
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தமது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். பிரதமர் அவரைப்பாராட்டி தமது சுற்றுரையில் இனி ஊழலை ஒழிப்பதில் இருவரும் இணைந்து பாடுபடுவோம் என்று கூறியுள்ளார்!
நிதிஷ்குமார் மீண்டும் பீகார் மாநில முதல்வராக உறுதிமொழி எடுக்கிறார். பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த சுசில் மோடி அவர்கள் துணை முதல்வராகிறார். நடு இரவில் ஆளுநரைச் சந்தித்து நிதிஷ்குமார் அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்க அழைக்குமாறு கோரினார். அவருடைய கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது!