ரா.பார்த்தசாரதி

 

 

மனித வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம்,

ஏனென்று  தெரியாத வருத்தம்

மனதில் சட்டென்று மாறும் யோசனைகள்

உள்ளத்தினில் சத்தம் போடாத ஆசைகள்

 

எதற்குமே வெட்கப்படாத ஏக்கம்

நெஞ்சினில் வேதனை கலந்த துக்கம்

படபடப்பில் ஏற்படும் காரணமில்லாத கோபம்

இழந்ததை கண்டு, கண்ணீர் சிந்தும் தோல்வி!

 

வாழ்வில் மறக்க விடாத நினைவுகள்

மனதினில் மறைக்க முடியாத உறவுகள்

மனதிலே அலைபாயும் காதல்

மனிதன் அலைந்து தேடும் வேலை!

 

என்றும் விட முடியாத தொடர்புகள்

விட்டொழியாத தொல்லைகள்

கலங்க வைக்கும் அவமானங்கள்

கலைய மறுக்கும் கனவுகள்!

 

இத்தனையும் மொத்தமாகி நிற்க

இவ்வளவு தான் வாழ்க்கை என

எதையும் தொலைத்து விட வேண்டாம்!

 

கிடைத்த வாழ்க்கையை

குறைகள் சொல்லி உடைத்து விடாமல்

இருப்பதை  கொண்டு மனநிறைவுடன் வாழ்ந்தாலே!

மகிழ்ச்சி  என்றும் நம்பக்கம் !

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *