அச்சம் விலகிடும் ஆண்மை பெருகிடும்
நிச்சயித்தக் கர்மம் நொறுங்கிடும் -இச்சகச்
சேறான மாயையில் செந்தா மரைபூக்கும்
கூறாமல் சந்யாசம் கொள்….

பயமில்லா வாழ்வே பெருவாழ்வு மற்று
ஜயமென்ப(து) எல்லாம்வீண் ஜம்பம் -முயலாமை
காதை உரைத்தது கீதை உரைத்தது
ஏதும் உறைக்கலை யே….

 
பயமாசை கோபம் பசிதாகம் தூக்கம்
மயமான மூட மனமே -அயலாம்
இவைதவிர்த்து ஆழ இதயத்தில் இருக்கும்
சுவைசுகித்து வாழ சுகம்….

 
வருவதை ஏற்று வராததை விட்டு
தருவதில் கொள்வாய் பெருமை -இறைவனவன்
தானேதன் கைப்பட தானியம் எண்ணிடுவான்
தானேமே நாம்லிக்கா ஹை….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *