ரா.பார்த்தசாரதி

 

 

நான் இல்லாமலேயே  எங்கோ வெகு தூரத்தில் இருக்கிறதே

என் கால் தடம் படாத அந்த சவுக்கு காடும் இருக்கின்றதே

மழை வராத காலங்களில் மணல் சுடுவதும் தெரிந்ததே

கடும் வெய்யிலில் எனக்கு நூங்கும், இளநீரும் தாகம்தீர்த்ததே!

 

சப்பாத்தி முள்ளில் பெயரெழுதிய அந்த கள்ளிச் செடி வரவேற்றதே

நான் வளர்த்த தென்னையும்,மாமரமும் காயும்,கனியுமாய் நின்றதே

ஊர் அம்மன் கோவில் குகை என் குரலை அன்றும் எதிரொலித்ததே

ஏரியும், குளமும் வறண்டு பாலைவனமாய் காட்சி அளித்ததே!

 

அன்று மழை பெய்து பயிர்கள் யாவும் பசுமையாய் காணப்பட்டதே

மழை இன்மையால் உழவு மாடுகளும்,பசுக்களும் காணாமல் போனதே

விவசாய  நிலங்களும் வீட்டு  மனைகளாக கூறு போடப்பட்டதே

மக்கள் வாழ்வாதாரம் கேள்வி குறியாய் ஆனதே!

 

ஏதோ ஒருநாள் குலதெய்வம் வேண்டுதலுக்காக ஊர்  கூடுகின்றதே

அன்று ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து விழாவிற்கு உதவி செய்கின்றதே

யாதும் ஊரே ! யாவரும் கேளிர் என்ற பழமொழி ஞாபகம்  வருகின்றதே

ஊர் விட்டு, நகரில் வசித்தாலும் ஒரு நாள் ஊர் நினைப்பு   மனதில் தோன்றுதே !

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *