நான் அறிந்த சிலம்பு – 237
-மலர் சபா
மதுரைக் காண்டம் – கட்டுரை காதை
திருத்தங்காலில் பராசரன் தங்கிய காலத்து நிகழ்ந்தவை
செங்கோல் கொண்ட பாண்டியனின்
திருந்திய செயல் உடைய
அந்தணர்கள் வசிக்கும் ஊர் திருத்தங்கால்…
அவ்வூரில் உள்ள
பசுமையான தழைகளால் நிறைந்த
அரசமரத்தின் கீழ்த்
தண்டையும் கமண்டலத்தையும் வெண்குடையையும்
பண்டங்கள் உடைய சிறிய பொதியையும்
மிதியடியையும் வைத்திருப்பவன் அவன்…
குடிமக்களைக் காக்கும் வெண்கொற்றக் குடையும்
அறநெறியால் கொண்ட வெற்றியும் உடைய
மேலானவன் வாழ்க…
கடலின்கண் பகைவர் தம்மை அழித்த
மன்னவன் வாழ்க…
இமயமலையில் வில்லெழுதிய
காவலன் வாழ்க…
பொலிவும் குளிர்ச்சியும் பொருந்திய
பொருநையாற்றினையுடைய
பொறையன் வாழ்க…!