கிரேசி மோகன்
—————————————————————

கோலத்தால் காலிட்டு கைகூப்பி கும்பிட்டு
ஞாலத்தை உண்டுமிழ்ந்த நாதருக்காய் -தாலத்தில்(தட்டில்)
பக்ஷணத்தை ஏந்திநின்றால், பக்தராதைக்(கு) ஈடாக
தக்ஷிணையாய் கேட்டார் தபஸ்….!

போடுவதை உண்ணாது போயின்ப வேட்டையில்
ஆடியிரை ஆகி அனல்சுடு -காடுவர
அய்யோ எனக்கூவ அய்யோ மணவாளன்(யமன்)
கொய்யா(து) இருப்பானா கூறு….!

பயனற்ற பாண்டம் பழுதாக மீண்டும்
வியனுலகை விட்டேக வேண்டும் -அயனோ
அரனோ, அரியோ அவதாரம் வந்தும்
மரணத்தில் தானே முடிவு….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *