ரா.பார்த்தசாரதி

 

 

மழை  வேண்டாத  மக்கள்  உண்டோ !

மழைநீர்  சேமிக்க  வழியும் உண்டோ !

மழை வேண்டி யாகமும்,பூஜையும் நடக்கின்றதே!

ஒரு சிலர் செய்த பாவத்தால் மழை வர தயங்குதே !

 

மழைநீர்  இன்று மக்கள்  உயிரை காக்கும்  உயிர் நீர்

மழைநீர் இல்லையெனில் பசும்புல்லையும் காணமுடியாது

மழைநீர் வெள்ளமாய் உருவெடுத்து பலவற்றை அழிக்கிறது

மழைநீர் இன்மையால்   பல இடங்கள் வறட்சியாயிருக்கிறது

 

மழைநீரை  தேக்கி வைக்க திட்டங்களை அரசு செய்யவேண்டும்

மழைநீர் வீணாவதை தடுக்க முயற்சி  செய்யவேண்டும்

நதிநீர்  வீணாகி  கடலில் கலப்பதை தடுக்கவேண்டும்

ஆறுகளையும் குளங்களையும்  தூர் வார  வேண்டும்

 

மழைநீர் திட்டம் வீடு வரைக்கும் செயல் படுத்தியதே

வெள்ளம் வரும்போது மழை நீரை சேமிக்க மறந்ததே

மக்களுக்கு உதவியும், நிவாரணங்களும் அளிக்கப்பட்டதே

மழைநீர் நிலத்தடியில் சேர்க்காமல் கடலில் கலந்ததே!

 

மழைநீர்   மக்களுக்கும், விவசாயத்திற்கும் இன்றியமையாததே

மழைநீரை அணையிலும், நிலத்தடியிலும் சேமிப்பது நல்லதே

நீரின்றி  அமையாது உலகம் மக்கள் வாழ்க்கையும் சரிவர  நடக்காதே

பருவ மழை பொய்த்ததாலே   மழைநீர்  தட்டுப்பாடு  ஏற்பட்டதே !

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *