கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கரதூ ஷணர்கள் பரலோகம் செல்ல
நரவேஷம் இட்டாய்கண் ணர்முன் -வரவர்ஷம்(வர மழை)
அண்டர்கோன்(இந்திரன்) கர்வமாய், ஆவினம் காத்திட
சுண்டுவிரல் கொண்டாய்கல்(கல் -கோவர்த்தன கிரி)….!
KEY -SOLYUTION….!
கொட்டும் மழைக்குக் குடையாகக் குன்றினைச்
சுட்டு விரலால் சுமந்தவா -திட்டம்
உனக்குண்டோ என்னை உருப்படியாய் ஆக்க
குணக்குன்றே கொள்ளுந்தன் கீழ்….
‘போலெ’ன்(று) உவமை புகல முடியாது
மாலென் றனரோ மகாகவிகள் -கேளொன்று
சிந்தனை தேவையா சித்திரத்திற்(கு) ஓவியா
எந்தனை வேறுவடி வாக்கு….
பிறந்து புவியில் பிருந்தா வனத்து
விருந்தைப் பறிமாற வாராய் -மறந்துபோய்
எங்குநீ தோன்றினும் ஏழைநான் ஏங்கிடும்
மந்தை வெளியிலிரு வந்து….!