FullSizeRender
’’பூம்பூம்பூம் மாட்டுக்காரன் பாற்கடல் ஓரத்தில்
ஜாம்ஜாம்னு வந்தான் ஜனித்திட-ஓம்ஓம்ஓம்
நாரணன் பேரு , நவநீதம் உண்டதை
ஜீரணிக்க விட்டெழுந்தான் சேச்சு(சேடன்)’’….!

 
‘சந்தேகம் யார்க்கென்று சற்றேனும் சந்தேகி!
வந்தேகிச் செல்லும் விளையாடி -உன்தேகம்
பொய்யென்(று) உணர்ந்து புகலடை யாதவன்கால்
மெய்யுணர் மானுட மாடு’’….கிரேசி மோகன்….

தொட்டகுறை ஆத்திகம் விட்டகுறை நாத்திகம்
நட்டவிதை உள்ளிருக்கும் தெய்வீகம் -எட்டஅதை
சுட்ட பழமாகி சுடாத பழங்களில்
பட்டும் படாமல் பருகு….!

அமுதா! அளவினை விஞ்சுகின்ற நஞ்சாம்
எமதாசை நெஞ்சினை ஏற்று -குமுதவாய்
பேய்ச்சி முலைப்பாலை உண்டதுபோல் எம்மனச்
சூழ்ச்சியைக் கொள்வாய் சரண்….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *