170901 - Dialogue with Arjuna (Nara Narayana) -lr

 

“டயலாக்வித் அர்ஜுனா, டாப்கிளாஸ் கேசவ் –

பயலேக்(payalag) ஆகி பயந்தும் , -கயலாக –

ஆமைவ ராகசிங்கம் அந்தணர்(வாமனர்) மூணுவித –

ராமனும் கண்ணன் ரதம் “….

 

’’உள்ளத்தில் நல்லவுள்ளம் உள்ளதைக் காட்டிடும்,
கள்ளமில் லாக்கலர் கண்ணாடி -பல்குனா(அருச்சுனா)
வந்ததை ஏற்றதன்மேல் வில்லம்பு வீசடா
பந்தங்கள்,சொந்தங்கள் பொய்’’….

 

’’சாரதி கீதையாய், சவ்யசாசி காமத்தை (பேதத்தை-அதுவும் காமத்தில் சேர்த்தி)
வேரறுத்துச் சொன்னார் , விஜயரே!, – பாருச்சி,
தேருச் சியில்காக்கும் தேவன் அனுமனுள்ளான்,
நூறைச் சிதைக்க நிமிர்’’….
”பகவான் உவாச’’….!
————————————————–

’’மடிதனில் குந்தி மகனேகாண்!, மந்தி
வடிவினில் மாருதி விண்ணில் -கொடிதனில்
வெற்றிவேல் வீரவேல் வாக்குறுதி செய்வதை,
பற்றுவில் காண்டீபம் பாண்டு’’….!

“வாகனம் தெய்வம், வழித்துணை ஆண்டவன்,
போகும்நம் பாதை பகவானே, -நீகனம்,
தன்செயலென்(று) எண்ணி ,தலைமேல் சுமக்கின்றாய்,
என்செயல் ஆனால் இறகு(பீலி மயில்)”…..கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *