முனைவர். ஜ.பிரேமலதா,

தமிழ்  இணைப் பேராசிரியர்,

அரசு கலைக் கல்லூரி,

 சேலம் -636 007

முன்னுரை

இன்றிலிருந்து 2500 ஆண்டுகளுக்கு முன்னர்வாழ்ந்திருந்த சித்தார்த்தர்என்கிற கௌதம புத்தருடைய கருத்துக்களும் 20ம் நூற்றாண்டில் பிறந்த ஈ.வெ.இராமசாமி என்கிற பெரியாருடைய கருத்துக்களும் பெரிதும் ஒத்துப் போகின்றன.

புத்தரும் பெரியாரும் மனிதநேயம், அன்பு, சுய சிந்தனை, நேர்மை,  பற்றின்மை, சமூக அக்கறை, பெண்ணுரிமை, சமயம், மதக்கருத்து போன்ற பல கருத்துக்களில் ஒன்றுபடுகிறார்கள். இருவரும் சிறந்த அரசியல் முற்போக்காளர்களாகக் கருதத்தக்கவர்கள். மனிதனை மனிதனாகப் பார்க்கக் கற்றுக் கொடுத்தவர்கள். போலித்தனமற்றவர்களாக வாழ்ந்தவர்கள்;. எடுத்த முடிவில் இறுதிவரை உறுதியாக நின்றவர்கள். சுய சிந்தனையாளர்கள். அவ்வகையில் இக்கட்டுரை இருவருடைய கொள்கைகளிலுள்ள ஒற்றுமைகளை ஆராய்கிறது.

வாழ்க்கை ஒற்றுமையடிப்படையில் பார்க்கும் பொழுது, தனக்குரிய அரச பதவியையும் போகத்தையும் துறந்து  பத்தொன்பதாவது வயதில் சித்தார்த்தர்புத்தராகிறார். பெரியாரும் தன்னுடைய செல்வச் செழிப்பான குடும்பத்திலிருந்து விலகி 25ம் வயதில் துறவறம் மேற்கொள்கின்றார்.

 திருமணத்திற்குப் பிறகு இருவரும் துறவறத்தைத் தேர்ந்தெடுப்பதில் ஒன்றுபடுகின்றனர். எனினும் அவர்களின் மனைவிமார்கள் இதற்குக் காரணமில்லை. சுஜாதையும் நாகம்மையும் உயர்வானவர்களே. இருவரும் கணவனுடைய கருத்திற்கு ஒத்துப் போகிறார்கள். பிற்காலத்தில் கணவருடைய பாதையைப் பின்பற்றுகிறார்கள்.  புத்தரும் பெரியாரும்  துணிவுடன் செயல்படுதலில் தாங்களே வழிகாட்டியாக உள்ளனர். செல்வத்தில் பற்றின்மை என்பதில் இருவரும் ஒத்துப் போகின்றனர். தம்மைச் சுற்றியுள்ளவற்றை நேரடியாகக் கண்டு அவற்றின் தன்மைகளைப் புரிந்துகொண்டு வினையாற்றுவதே இருவரின்; அணுகுமுறையாக இருந்துள்ளது. சிக்கல்கள் யதார்த்தமானவை, நம் கண்முன் நிகழ்பவை. அவற்றுக்கு அசாதாரணமான வழிகளில் தீர்வு கண்டுவிடமுடியாது என்று  நினைத்தனர்.  இருவரும் வாழ்நாள் முழுவதும் தம் கருத்துக்களை மக்களுக்குப் போதித்து வந்துள்ளனர். கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் வரையிலும் வாழ்ந்துள்ளனர். இருவரும் மனித வாழ்க்கை மற்றும் உலக நடப்புகள் பற்றி பல ஐயங்கள் கொண்டனர். உலக துன்பங்களிலிருந்து மனிதகுலம் விடுபட வேண்டும் என்பதில் உண்;மையான அக்கறை கொண்டிருந்தனர். இருவருடைய உள்ளத்திலும் உயிர்களிடத்தில் அளவற்ற பரிவிருந்தது. மனிதரின் இயல்பு உன்னதம் பெற வேண்டும். மனித வாழ்க்கை சுதந்திரம் பெறவேண்டும் என்று விரும்பினர். ஆழ்ந்த சிந்தனையாளர்களாக விளங்கியுள்ளனர்.

ஞானம் பெற்ற பின்னர் சமுதாயச் சீர்திருத்தமே முதலில் செய்யவேண்டியது என  புத்தர்நினைத்திருக்கிறார். எனவேதான், தான் ஞானம் பெற்ற நிலையில் தனக்கான சீடர்களை உருவாக்கி அவர்களிடம் போதனைகளைப் பரப்பினார். அதன் பின்னரே சங்கம் அமைத்தார். அதை ஒரு இயக்கமாக மாற்றினார்.  புத்தர் எந்தவொரு மதத்தையும் நிறுவவவில்லை. என்னிடம் வாருங்கள், நான் உங்களை மீட்கிறேன் என்று சொல்லவில்லை. ஒரு புத்தரால்கூட வழியை மட்டுமே காட்டமுடியும், நீங்கள்தான் உங்கள் பாதையைத் தேர்ந்தெடுத்துக ;கொள்ளவேண்டும் என்கிறார்(பி.எஸ்.ஆச்சார்யா. ப.96). ”பௌத்த சமயம் கொள்கைப் பிடிவாதம் கொண்டதில்லை. அதைப் பின்பற்றுவோர்களிடம் அது அதன் போதனைகளை விமர்சன நோக்குடன் பார்க்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் அவர்கள் அதை எப்போதும் தங்கள் சொந்த அனுபவத்தின் துணையுடன் சோதித்துப் பார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது. அதைப் பின்பற்றுவோரிடம் தொடக்கக் காலக் கட்டங்களில் சில அடிப்படையான போதனைகளை நம்பிக்கையின் பேரில் ஏற்றுக் கொள்ளுமாறும், ஆக்கபூர்வமான, திறந்த மன மனோபாவத்தைக் கைக்கொள்ளுமாறும் அது கேட்டுக்கொள்கிறது; என்றாலும்கூட அதன் அக்கறை கோட்பாடுகளை வழக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில் இருப்பதை விடப் புரிந்து கொள்வதை வளர்ப்பதில் இருப்பது அதிகமானது. பௌத்த சமயம் அதைப் பின்பற்றுவோர் மீது பாவ மன்னிப்பு சார்ந்த நிபந்தனைகளைச் சுமத்துவதில்லை.

சிறுபான்மைக் குழுக்கள் தங்கள் தனிப்பட்ட பண்பாட்டு மரபுகளைப் பராமரிக்கும் சமூகச் சூழ்நிலையில் ஒரு பௌத்தனாக வாழ்வது எளிதாகிறது.”என்கிறார் தாமியென் கோவ்ன்.(பௌத்தம் ப.172-173 )

 புத்தரின் போதனைகளில் இரகசியம் என்று எதுவும் இல்லை. பூகட்டு என்று எதுவும் இல்லை.; சடங்குகள், சம்பிரதாயங்கள்  இல்லை. சமூகத்திலிருந்த மூட பழக்கவழக்கங்களை உற்று நோக்கிய பின்னரே அவற்றை அறிவு பூர்வமாக விமர்சிக்கிறார்.

ஜென், யோகா, தவம் போன்றவற்றுக்கும் புத்தருக்கும் தொடர்பில்லை. பௌத்தம் என்பது ஒரு வறட்டுத் தத்துவப் பிரிவு மட்டுமே அல்ல. புத்தருக்கும் அதிசயங்களுக்கும் அற்புதங்களுக்கும் தொடர்பில்லை. மந்திர உச்சாடனங்களுக்கு பௌத்தத்தில் இடமில்லை.) இதே கருத்துடையராகவே பெரியார் சமூகத் தொண்டில் சமுதாயச் சீர்திருத்தமே முதலில் செய்யவேண்டுமெனத் திட்டமிட்டார். முதலில் சமூக விடுதலை அதாவது சமுதாயத்தைப் பிடித்துக் கிடக்கும் பிற்போக்குக் கொள்கைகள் குருட்டு நம்பிக்கைகள் கடவுளின் பெயராலும் மக்களிடையே நிலவி நிற்கும் குருட்டுத்தனமான எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என்று நினைத்துள்ளார்.

தலைவிதி.முற்பிறப்பில் மோட்சம் நரகம் என்கிற பொய்மைகளை மக்கள் எண்ணத்திலிருந்து அவர்கள் முற்றிலுமாக விடுபட வேண்டும். .அத்தகைய விடுதலைகளுக்குப் பிறகே மக்களை எதையும் சிந்தித்துப் பார்த்து முடிவெடுக்கும் ஆற்றல் மிக்கா;களாக அறிவு நிரம்பியவர்களாக மாற்றிய பிறகே அரசியல் விடுதலை பொருளாதார விடுதலை என்றார்.

முன்னது பெறா முன்னர் பின்னவை இரண்டும் அவ்வளவு எளிதில் கைகூடா. கைகூடினாலும்  அவற்றின் உண்மையான பயனை மக்கள் துய்க்க முடியாது என்ற முடிவுடன் காங்கிரசு இயக்கத்திலிருந்து விலகிச் சமுதாயத் தொண்டு செய்வதே தம் பணி எனப் பெரியார் தம்மை மாற்றியமைத்துக் கொண்டார் என்கிறார்பண்ணன்(ப.45);.

பெரியாரும் புத்தரைப் போலவே முதலில் தம் கருத்துக்களை மக்களிடம் பரப்பினார். அவருடைய எழுத்தும் பேச்சும் மக்கள் இலக்கியங்கள் ஆயின. குறிப்பாகப் பேச்சு நடை மக்கள் மொழியிலேயே அமைந்தது. மக்களிடம் அரசியலையும் சமயத்தையும் வாழ்;க்கையையும் விளக்கிப் பேசியவர் . தம்முடைய கருத்துக்களின் உள்ளடக்கத்திற்கு சுயமரியாதை இயக்கம்பகுத்தறிவு வாதம் என்றெல்லாம் பெயர் தந்தார். தம் சிந்தனைகளை இயக்கமாக நடத்தினார். பெரியார் எந்தவொரு மதத்தையும் நிறுவவவில்லை. தான் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமெனக் கூறவில்லை.

பகுத்தறிந்து எதையும் கேள்விகள் கேட்டு தெளிவான பின்னரே கடைப்பிடிக்கும்படி கூறினார். தொடக்கக் காலத்தில்; ஈ.வே.ராமசாமி பெரியார் தமிழ்ச் சமூகத்தைக் கூர்ந்து நோக்கும் ஆராய்ச்சியாளராகவம் இழிநிலையில் இருக்கும் மக்களுக்காகப் போராடும் தலைவராகவும் போராளியாகவும் விளங்குகின்றார். குறிப்பாக, அவர் செய்த சமூகத் தொண்டில் சாதி மத ஏற்றத் தாழ்வுகளை அகற்றுவது முக்கியப் பணியாக இருந்தது. கடவுள் மறுப்பு மத எதிர்ப்புப் போன்றவை கூடவே தொடாந்துள்ளன. சாதி மனப்பான்மை, சாதிக் கொடுமைகள் ஆகியவற்றிற்கு மூலம் யார் அல்லது எது? என்று உணர்ந்து பெரியார்அந்த அடிப்படைகளை எதிர்த்து அதில் ஏற்பட்டுள்ள குற்றங்களை எடுத்துக்கூறியும் பேசியள்ளார்.

இந்தியாவிலும் தமிழகத்திலும் சாதி வேறுபாடுகள் உருவானதற்குக் காரணமாய் இருக்கும் சமூக அமைப்பகளையும் பெரியார்கண்டித்துப் பேசுகிறார் சாதி, சமயம், கொள்கை போன்றவற்றாலும் சுயநலத்தாலும் பிரிந்து கிடக்கிற தமிழர்களிடையே தோன்றுகிற அறிஞாகளாலும், சமய, சாதி இலக்கியங்களாலும்; சமயவாதிகளாலும் பயன் ஏற்பட முடியாது என்பது பொpயாhpன் கருத்தாக இருந்தது. எனவே உருவாகிற அறிவியல் சமூக நன்மைகள் மக்களுக்குப் பயன்பட வேண்டுமெனில் சாதி, சமய மனப்பான்மை போன்ற பண்புகள் நீங்கிட வேண்டும் என்பதை வலியறுத்தும் வகையில் பெரியார்பேசியுள்ளார். மனிதர்களைப் பொதுவில் வைத்து எண்ணுகின்ற இப்போக்கை புத்தத்திலும் பார்க்கமுடிகிறது.

மனிதர்களைப் பற்றி ஆராய்கின்ற நிலையையே புத்தத்தில் பார்க்க முடியும். மனிதத்தைத் தாண்டி அது சிந்திக்கவில்லை.புத்த மதம் நடப்பு இயல்புகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. கருத்து முதல்வாதத் தன்மை அதில் இல்லை. அனைவருக்கும் சுதந்தரம், சமத்துவம்,வாய்மை மற்றும் நீதியை உயர்த்திப் பிடிக்கிறது. மனித நேயம், அன்பு, சமாதானம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.

பவுத்தத்தில் சாமி இல்லை; சடங்கு இல்லை; சாதி இல்லை; மாயம் இல்லை; மந்திரம் இல்லை; பூஜை இல்லை; பிரார்த்தனை இல்லை; எல்லாவற்றுக்கும் மேலாய் தனி உடைமைச் சுரண்டல் இல்லை; இவைகளில் எதுவொன்று இருப்பதும் பவுத்தம் இல்லை. மாறாக, பவுத்தத்தில் அன்பு உண்டு, அறிவு உண்டு, சமத்துவம் உண்டு, சமதர்மம் உண்டு, ஒழுக்கம் உண்டு, இரக்கம் உண்டு, வீரம் உண்டு, விவேகம் உண்டு, இவைகளில்  எதுவொன்று இல்லாததும் பவுத்தம் இல்லை. இக்கருத்துக்கள் அனைத்தும் பெரியாரியத்திற்கும் பொருந்தும். பவுத்தம் என்பது ஆராய்ந்து புத்திக்குச் சரி என்றுபட்டால் மாத்திரம் ஏற்பது. உதாரணம், புத்தர் கூறியது: எனக்கும் கடவுள் என்பதற்கும் எவ்வித சம்மந்தமுமில்லை.

நான் சாதாரண மனிதன். நான் சொல்பவை என் அறிவுக்கு, ஆராய்ச்சிக்கு எட்டியவைகளேயாகும். அவற்றை நீங்கள் ஆராய்ந்து பார்த்து உங்களுக்குச் சரியென்று பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்; சரியில்லை என்று தோன்றினால் அதை விட்டு விடுங்கள் என்பதாகும். இன்னமும் விளக்கமாக, நான் கூறுகிறேன் என்பதற்காக நம்பி விடாதே. எதையும் உன் புத்தியைக் கொண்டு ஆராய வேண்டும். இல்லையேல், நீ பகுத்தறிவு கொண்ட மானிடன் அல்லன் என்றும் கூறி இருக்கிறார். (பி;.எஸ்.ஆச்சார்யா. 56) எனவே, எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பது பவுத்தம் எனலாம். பேளத்தத்தைப் பற்றிக் கூறுமிடத்து, ”எதுவானாலும் அறிவைக் கொண்டு ஆராய்ந்து பயமில்லாமல் தர்க்க ரீதியாக விவாதிக்க வேண்டும். அவன்தான் பௌத்தன். அதுதான் பவுத்தம்.” என்கிறார் பெரியாரும். (பௌத்தநெறி ப.13)

அதுபோலவே, பெரியாரும்   சமயம் மதம் தொடர்பான கருத்துக்களில் இவ்வாறே கூறுகிறார். மதம் பற்றிக் கூறும்போழுது தம் கருத்தைக் கட்டாயமாக்காமல் மக்களுடைய சிந்தனைக்கே விடுகிறார். தம்முடைய கருத்தில் உண்மை இருப்பதை ஒத்துக்கொண்டால் பின்பற்றும்படியம் அன்றேல் விலகி விடும்படியம் கூறுகிறார். அவருடைய கடுமையான விமாpசனங்களினூடே இத்தகைய ஆழ்ந்த பக்குவமும் காணப்படுகிறது. நான் சொல்வது, உங்கள் அறிவு ஆராய்ச்சி பக்;தி, அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள்; ஒத்துவந்தால் காhpயத்தில் கொஞ்சமாவது செய்ய முற்படுங்கள். உங்கள் சகோதரா;களுக்கும் இதைச் சொல்லி அவா;களையும் ஈடேற்றுங்கள். என்றுதான் நான் சொல்லுகிறேன். இப்படிச் சொல்வதனால் எனக்கு இதில் ஒரு சுயநலப் பலனும் இல்லை என்பதையும் அறியுங்கள்(தொ.3 ப.1352) என்கிறார்.;  கடவுளின் பெயரால் அமைக்;கபட்டுள்ள அனைத்து மதங்களையும் இருவரும் மறுக்கின்றனா;. மனித சமூகத்திற்கு அவை தீங்கிழைப்பதாகக் கூறுகின்றனா;. மக்கள் வேதனைப்படுகிறார்கள்; என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது; அந்தக் காரணத்தைக் கண்டறியமுடியும்; அகற்றமுடியும் என்று உணர்தல். வேதனையைக் கண்டு ஒதுங்காமல், ஓடாமல், ஒளியாமல் இருத்தல். வேதனை குறித்த வியாக்கியானங்களோடு நின்றுவிடாமல் துணிவுடன் போராடுதல். இவையே ஒரு பகுத்தறிவுவாதியின் செயலகளாகும்;. புத்தர் இதைத்தான் செய்தார்.

எண்ணற்ற யுகங்களுக்குப் பிறகு இதுவே எனது கடைசிப்பிறவி. தேவர்களிலும், மனிதர்களிலும் நான் ரொம்பவும் அருமையானவன். முதிக்கத்தக்கவன். இந்த தேவர்களையும், மனிதர்களையும் பயனடையச் செய்வேன். புலனுணர்வு கொண்ட அனைத்து உயிர்களையும் அழிவில் இருந்து காப்பாற்றுவேன் என்று புத்தர்கூறுகிறார். (பி.எஸ். ஆச்சார்யா, ப.11) இவை புத்தருடைய வாழ்க்கை காட்டும் பாதை. பெரியாரும் இந்த உலகம் சீர் கெட்டிருக்கிறது. இதைச் சீர் செய்ய யாரும் முன் வரவில்லை. நான் முன் வந்தேன் என்கிறார். இருவருடைய தத்துவமும் இயங்கியல் தன்மை கொண்டது. அறிவியல்பூர்வமானது. அனைத்தையும் தழுவிச் செல்வது. அறிவுக்கும் தர்க்கவியலுக்கும் பொருந்தக்கூடியது. அறவொழுக்கம் சார்ந்தது. மனித நேயம் மிக்கது.

பிறவி குறித்த கருத்தாக்கத்தில் பார்க்கும் பொழுது, புத்த மதம் பிறவிக் கோட்பாட்டை ஏற்பதில்லை.மாறாக, இங்கு இந்தப் பிறவியிலேயே அடையக்கூடிய வாழ்க்கை அனுபவத்தைப் பற்றி கூறுகிறது. பெரியாரும் பிறவிக் கோட்பாட்டை எதிர்க்கிறார். அது மக்களை சிந்திக்கவிடாமல் செய்யும் ஒரு கோட்பாடு என்பது அவருடைய எண்ணம். உங்கள் இலட்சியங்களை அடைய முயலுங்கள்; மற்றொரு பிறவிக்கு என்று அயோக்கியர்களின் வார்த்தைகளை நம்பி எதிர்பார்த்துக்கொண்டு வீணாய் ஏமாந்து போகாதீர்கள்.

முன்பிறவி சங்கதி ஏதாவது ஒன்று, உங்கள் சாPரத்திலிருந்து உதிர்ந்த ஒரு மயிர்த்துண்டாவது உஙகளுக்கு இந்தப் பிறப்பில் ஞாபகமிருந்தால் அல்லவா இந்தப் பிறவியின் காரியஙகளை அடுத்த பிறவியில் அனுபவிக்க முடியப்போகின்றது? அன்றியும் கடவள் உங்களை இப்படிச் செய்துவிட்டார் என்று முட்டாள்தனமாய்க் கருதி உங்கள் துன்பத்தைநிலை நிறுத்தாதீ ர் கள். உணர்ச்சியும் அறிவம் அற்ற சோம்பேறிகளுக்குத்தான் கடவள்செயல் பொருத்தமாக இருக்கும்(தொ.3.ப.1402) என்பது பெரியாரின் சிந்தனையாக அமைகிறது

பெண்கள் நிலை –  பெண்கள் நிலையிலிருந்து பார்க்கும் பொழுது,பெண்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டதற்குக் காரணம், அவர்கள் அறிவற்றவர்கள் என்ற மதக் கருத்துதான். பெண்ணிற்குக் கல்வியில்லை என ஒதுக்கி வைத்து, அறிவு இல்லாத காரணத்தால் அசுத்தமானவள் என்று பரப்புரை செய்யப்பட்டு, பிரம்மத்தை அடைவதற்கான ஒரு பாதையான துறவறத்தை ஏற்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தாள்.

துறவற வாழ்க்கையில் பெண்களை அனுமதித்ததன் மூலம் புத்தர், அறிவு பெறுவதற்கான வாய்ப்பைப் பெண்களுக்கு நல்குகிறார். பெரியார்காலத்திலும் பெண்கல்வி மறுப்பு தொடர்ந்திருக்கிறது. எனவே பெரியார்பெண்களின் கல்வி உhpமை குறித்தும் மகளிர்க்குச் சொத்துரிமை குறித்தும் பேசியுள்ளார். கல்வி அறிவில் விருப்பம் கொள்ளுங்கள். வீரத் தாய்மார்களாக ஆகவிருப்பப்படுங்கள்! நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும் மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது வெகு சுலபம். ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்காளிகள் என்று உங்கள் மீது பழி சுமத்தி வருகிறார்கள். அப்படிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள். எதிர்காலத்தில் -இவள் இன்னாருடைய மனைவி என்று அழைக்கப்படமாட்டாது இவா; இன்னாருடைய புருஷா; என்ற அழைக்கப்படவேண்டும். அந்த நிலைக்கு உங்களைக் கொண்டுவர அனுதினமும் பாடுபட்டுவரும் திராவிடர் கழகத்தை நீங்கள் அனைவரும் ஆதரித்து வரவேண்டும் (தொ.1 ப.177) என்கிறார் பெரியார்.

துறவற நிலை – துறவற நிலையிலும் ஒன்றுபடுகின்றனர். ;.புத்தர்துறவு பூண்டாலும், துறவறம் பூண்டு உடலை வருத்திக்கொள்வது வேதனையைத் தரும், தேவையற்றது, பலனளிக்காதது என்கிறார் உபநிஷத்தையும் மோட்ச நம்பிக்கைகளையும் புத்தர் புறம் தள்ளினார். அந்த வகையில், புத்தர் ஒரு யதார்த்தவாதியாகவும் பகுத்தறிவுவாதியாகவும் திகழ்ந்தார்.

தன்னால் நேரடியாகக் கண்டு, கேட்டு, உணர முடிந்த விஷயங்களுக்கு மட்டுமே அவர் எதிர்வினை புரிந்தார். பிரபஞ்சப் பொருள்களின் தோற்றம் குறித்த தத்துவார்த்த ஆய்வுகளையும் இறப்புக்குப் பிறகான காலகட்டம் குறித்தும் கவலைப்படுவது தேவையற்றது என்றார் புத்தர். தந்தையிடம் கோபித்துச் சில காலம் துறவியாக வாழ்ந்தமையால ;செல்வத்தில் திளைத்துச் சிறிதும் பசிப் பிணி அறிந்திராத பெரியார் காசியில் எச்சிலைக்கு ஏங்கி நின்ற நிலையில் துறவறத்தை துறந்தார். உலக துயரங்களைத் தீர்க்காத இது போன்ற துறவறத்தால்; பயனற்றது என உணர்ந்து இல்லறத்திற்குத் திரும்பினார். தன்னுடைய மனைவி நாகம்மையையும் பகுத்தறிவுப் பாதையில் நடத்தி சமுதாய விடுதலைப் பேராட்டத்தில் ஈடுபடுத்தினார்.  மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும், கடவுளின் பெயராலும் மக்கள் அனுபவித்து வரும் பல்லாயிரக்கணக்கான துயரத்தை இருவரும் கண்டு அதற்கான தீர்வுகளைக் கூறிச் சென்றுள்ளனர். மனிதர்கள் தங்களின் துன்பத்திற்கான காரணத்தை ஆராய்ந்து அதைத் தீர்க்க தாங்களே முன் வரவேண்டும் என்று இருவரும் கூறுகின்றனர். தனது உடலில் பாய்ந்திருக்கும் அம்பு எங்கிருந்து வந்தது என்றோ அதை யார் செய்தது என்றோ ஆராய்ந்து கொண்டிருப்பது மடத்தனம். உடனே அதனைப் பிடுங்கி எறிய வேண்டியதுதான் புத்திசாலித்தனம் என்றார் புத்தர்.

 தீண்டத்தகாதாரைத் தங்கள் இழிவிற்கு எதிராகப் போராட வேண்டும் என்கிறார். பெரியாரும், உண்மையான விடுதலைஉங்களுக்கு வேண்டுமானால் உங்கள் இழிவிற்கும் அடிமைத்தனத்துக்கும் அஸ்திவாரமான ஆதாரத்தை அழிக்க நீங்கள் தைரியம் கொள்ள வேண்டும் என்கிறார் (தொ.1ஃ ப.71). பிறருக்காக உழைப்பது, இருக்க வீடும், உண்ண உணவும், உடுத்த உடையும், கல்வியறிவும் இல்லாமல் வாழ்கிறவர்களை அவர்களின உழைப்பைச் சுரண்டி பயன்படுத்திவிட்டுக் கீழ்ச்சாதியென்று சமூகம் கூறுவதாக பெரியார்கூறுகிறார். (தொ.1ப.72).

முடிவுரை –  புத்தம் என்ற நோக்கில் ஆராயும் பொழுதும் ,அறிவுபூர்வச் சிந்தனைக்கு முழுப்பெயர் பவுத்தம். நேர்மையான வாழ்வுக்கு வழிகாட்டும் நெறிக்குப் பெயர் பவுத்தம். சமத்துவத்திற்கு வழிநடத்தும் தத்துவத்திற்குப் பெயர் பவுத்தம் என்று கூறலாம்.; மேற்கூறிய கூற்று மூன்றும் பெரியாரியத்திற்கும் பொருந்துகிறது என்பதை இக்கட்டுரை தெளிவுபடு;த்தியுள்ளது.

பார்வை நூல்கள்

  1. ஆச்சார்யா. .பி.எஸ்.,கௌதமபுத்தரின் வாழ்வும்வாக்கும்,நர்மதா வெளியீடு,பாண்டிபசார்சென்னை-17. மு.ப.2015
  2. ஆனைமுத்து வே.,பெரியார்ஈ.வெ.ரா.சிந்தனைகள்(3ம்தொகுதி),சிந்தனையாளர்கழகம்,திருச்சி. மு.ப.1974
  3. தாமியென் கோவ்ன், தமிழில் சி.மணி. பௌத்தம்,அடையாளம் வெளியீடு,பௌத்தநாதம். ஆண்டு 2005
  4. பெரியார் தந்தை, பௌத்த நெறி, திராவிடர் கழக வெளியீடு, சென்னை- 7 ஆண்டு 1957(15.5.57ஆம் தேதி மாலை சென்னை, எழும்பூர் மகாபோதி சங்கத்தில் நடந்த 2501ஆம் ஆண்டுப் புத்தர் விழாவின்போது தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய தலைமைப் பேருரை)

5.பண்ணன், சிந்தனையாளர்; பெரியார். திருமலைப்பதிப்பகம், சென்னை, ப.55மு.பதிப்பு 1988

  1. மயிலை சீனி. வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், கழக வெளியீடு,சென்னை. ஆண்டு 1964

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *