கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
“கஜங்கள் குளிர்விக்க ,கையம் புஜங்கள்
நிஜம்கொள் அபயவரம், நீள்அம்-புஜங்கள்
தரிக்கப்பச் சையணிந்த தாய்கஜ லஷ்மி
பரத்தினும் மேலாம் பணி”…
“வீரத் துணிச்சலை (தைரியம் ), வெற்றிக் கனிச்சுவையை ( விஜயம் )
ஈரப் பசைநெஞ்சுக்(கு) ஈகையை (தனம் )-சேரும்
மனைமக்கள்(சந்தானம்) வித்தை(வித்யா) முளைக்கதிர்(தான்யம்), எட்டு
முனையானை(அஷ்ட திக் கஜங்கள்) ஆதி முடிப்பு”….கிரேசி மோகன்….!