தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன
தான தானன தத்தன தத்தன -தனதான
மயிலை சீனிவாச பெருமாள்
———————–

171014 - Srinivāsa -lr
171014 – Srinivāsa -lr

“ஆல வாயினில் செத்துணர் வுற்றவர் நானை யாரென கற்றுடல் விட்டவர்
சோணை மாமலை உற்றது ரைத்திடு -ரமணேச
ஞான மாமுனி செப்பிய சத்தினில் நானும் வாழயில் பற்றுவி ருப்பினை
கீதை நாயக விட்டுவி ரக்தியில் -விஜயோனாய்

தோளி லாளிடும் விற்கணை விட்டது போல யாவையும் விட்டுயர் வெற்றியை
வாழும் நாளிலே வெற்றிலை வட்டிலில் -எளிதாக
ராஜ யோகமும் ,பக்தியும் ,கர்மமும் ஞான மார்க்கமும் வைத்தருள் இக்கணம்
ராசா லீலையில் முக்திய ளித்திடும் -குருநாதா

கால நேமிவ லக்கரம் விட்டிட ஆழி ஊதலி டக்கரம் பற்றிட
தோளி லாடிட விற்சுமை மற்றிரு -கதைவாளை
ஆளு மாதவ விக்ரம சொப்புரு வான வாமன நச்சர வத்துயில்
ஆதி நாரண உச்சரி பத்திரு -திருநாமம்

நாளு மோதிட நற்கதி பெற்றுயர் வான வாசலில் விட்டுவின் நித்திய
சூரி யாகுவர் இப்பிற விப்பிணி -குணமாகும்
கோல மாமயி லைப்புகழ் கற்பக பாலி ஈசனின் பக்கஅ கத்துறை
சீனு வாசம கத்துவ மைத்துன -பெருமாளே”….!
————————————————————————————————

பெருமாள் திருப் புகழ்….

தான தானன தனன தனத்த
தான தானன தனன தனத்த
தான தானன தனன தனத்த -தனதான

மயிலை சீனிவாச பெருமாள்
———————————–

“மாலை நாடகம் மதியம் உறக்கம்
காலை ராவினில் கவிதை வழக்கம்
நாளும் வாழ்ந்திடும் நிறைவை எனக்கு -அருள்வாயே
கோல வாகன மயிலில் குறத்தி
தேவ யானையும் அருகில் இருக்க
வான வீதியில் விரையும் குகற்கு -முறைமாம

சேலை மோகமும் சினமும் செருக்கும்
ஆசை ஆர்வமும் அறிவு மயக்கம்
மோச மாகுமுன் முளையில் எடுக்க -வருவாயே
ஊறும் ஆணவம் உதியும் இடத்தில்
நானை யாரென நினைவு படுத்தி
பேசி டாதுயர் பிரம நினைப்பில் -ரமணேசர்

கோலம் கோவணம் கடமை இருப்பு
பாறை யாசனம் பதவி ப்ரபத்தி
சோணை ஈசனின் சரண முனைப்பு -எனவாழும்
வாழ்வு நானுற வழியை வகுத்து
கோழை யானவில் விஜயர் தமக்கு
கீதை யாலுரம் அளியும் அச்சுத -தருவாயே

காலில் பூமகள் களைய சொடுக்கை
பாலி னாழியில் படவி டமெத்தை
சாயும் யோகசு கமதை விடுத்து -எழுவாயே
ஏறு வாகனம் வினதை பிறப்பில்
சேரு மோகனென் அகம தில்நிற்க
சீனு வாசம ழைமுகில் நிறத்து -பெருமாளே”….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *