ரமண வசனாம்ருதம்….!
கிரேசி மோகன்
——————————–
“முட்டைக்குள் குஞ்சாக ,கொட்டைக்குள்(மாங் கொட்டை) பிஞ்சாக ,
சட்டைக்குள் (மேனிக்குள் )வாழ்கின்ற ஜீவனே , -பட்டைகள் –
தீட்டியநீ வைரம் ,திருடன் வரும்வரையில்,
காட்டி யயிடத்தில் குந்து “….(1)
மாயநான் ஆணவம் மாற்றிடும் கோவணம்
தூயநான் நிர்வாண தெய்வீகம் -நாயனார்
யோகி ரமணரின் யோசனையைக் கேட்டுணர்வோர்
சாகிறதை வென்ற சவம்….(2)
கண்டேன் திருடனைக் கையும் களவுமாய்
கொண்டேன் மனச்சிறையில் கைதியாய் -அண்டேன்
இனியவன் பக்கம் தனிமையே சொர்கம்
கனிநான் அவன்கள்ளக் காய்….(3)
ஒப்புக்கு சப்பாணி ஊருக்கு மாங்கொட்டை
சொப்புக்(கு) ஆடும் சிறுவனெனும் -இப்பக்
குவம்வந்தால் ஈரேழு கண்டங்கள் ஆண்டும்
தவம்செய்து வாழ்வோம் தனித்து….(4)
சமத்துவ வேந்தன் சமர்த்தனுன் ஆன்மா
அமர்த்தவனை சிந்தையில் ஆள -விமர்சனம்
செய்யும் மனசாட்சி பொய்யின் அரசாட்சி
நெய்யெதற்கு வெண்ணை நமக்கு…(5)…. கிரேசி மோகன்….!