கிரேசி மோகன்
————————
”தூக்கத் தினிலிருப்போம், துக்கத் தினிலிருப்போம்,
சாக்காய் படுத்தாலும் சம்சார -ஏக்கத்தால்,
ஆவது தாகம் அதனைத் தணித்திட
ஜாவ்அந்த சோணா ஜலம்’’….!

“ராமா யணத்தைநாம் ராமருக்கே சொன்னாற்போல்
சாமா னியனென்றே செப்புதுஸத் , -நாமானோம்
ஆணவ(அகந்தை மனம்) புத்தி அதனால் தடைமுக்தி ;
வீணவம் மாய விதி “….!

‘’உலகமது உண்மையில் உன்னுள் உளது
அலகிலா ஆனந்த ஆன்மத் -திலகமதை
இட்டுக்கொள் உந்தன் இதயத்தில், பின்னர்நீர்
தட்டுங்கள் தாப்பாள் திறப்பு’’…..!

‘’தூங்கும் உனக்கில்லை சாங்கியம்(கடமை), சாத்திரங்கள்,
ஆங்குள்ள ஆளோ அபேதனாய் -ஈங்குளான்:
இத்தை நினைந்து இயல்பாய் இருந்திடு:
சொத்தை உடம்பு ஜடம்’’….!

உலகத் துயரை உனக்கு உணர்த்தும்
கலக மனமே, கருமம் -பலவகை
தோற்றுவித்து துன்பமதில் துய்த்திட வைத்திடும்:
மாற்றியருள் அண்ணா மலை’’….!

“பொய்நெஸ் விலக பிறந்திடும் ஆனந்த
ஐநெஸ்(I-ness )ஸாய் ஆன்ம அவதார -” HIGHNESS “,-
அவரது ஆட்சியில் அல்லியூர் கேணி(கிணறு -திருஅல்லிக் கேணி)
சுவரில் நுணலாய் (தவளை ) சுகி”….!
“முன்னாடி யாரோநீ! ,பின்னாடி யார்யோனி!-
கண்ணாடி பூர்வத்தைக் காட்டாது;-பன்னாடை!-
செய்ததையே செய்தாய்; சரணடை ஈசரிடம்-
கைதாவாய் காலன் கரத்து”….!
“எந்தவேலை ஆனாலும் எந்தவேளை ஆனாலும்,
சிந்தையில் சித்தை சுகித்திருக்க, -அந்த,
சமாதி லயமே சகஜமாகும் ,பட்ஷம்,
சமாதானம் ஆகும் சலிப்பு”….!

”அதுவேண் டுமென்றும், இதுவேண் டுமென்றும்
எதுவேண் டினாலும்நீ ஏழை, -புதுவிதமாய்,
ஆடுஓ நாய்க்காய் அழுமோ! அதுநனைய!,
’’மேடருணை செல்மன மே’’….கிரேசி மோகன்….

 

சல்லடை போட்டு சலித்து சலித்தேனே
உள்ளடைந்த நானார் உணர்வதற்கு -பல்லிடை
மாட்டிய பாக்காய் மனநட்டு வாங்கத்தால்
நாட்டியம் ஆடுதே ’’நான்’’….!

ராப்பகலாய் தேடு ரமண உபாயத்தால்
தோற்பில்லை நீங்கா தெளிவுதான் -ஆப்பகல
மந்தியே ஆன்ம மயிலேறி வான்புகலாம்
உந்தியாரில் உள்ளபடி உய்….கிரேசி மோகன்….!

“இல்லை உரைக்க இருப்பான் மறுப்பவன்
முல்லையில் வீசும் மணமாக;-தொல்லைக்கு
முற்றுமெனப் போட்டிட, மீளா உறக்கத்தில்
பற்றுமனம் இன்றிப் படு “….கிரேசி மோகன் ….!

‘’இறந்துவிட்ட ஆட்டின் இருவிழியாய், ஞானி
திறந்திருந்தும் கொள்ளான் திருஷ்டி, -பிறந்திறக்கும்,
இவ்வாழ்வு மாயை, இராப்பகல் பேதமற,
முவ்வாசை தாண்டி முழி’’….கிரேசி மோகன்….!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *