banner1

                   திருக்குறளுக்கு  சர்வதேச அங்கீகாரம்

          இங்கிலாந்து நாட்டில் அனைத்துலகத் திருக்குறள் மாநாடு

    இங்கிலாந்து நாட்டின்  லிவர்பூல்  பகுதியில் அமைந்துள்ள  சர்வதேசப் புகழ் பெற்ற ஹோப் பல்கலைக்கழகத்தில் அடுத்த ஆண்டு (2018) ஜூன்  மாதம் 27,28,29 ஆகிய நாட்களில் இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு நடைபெறவுள்ளது.

   நாகர்கோவிலில் கடந்த மே-மாதத்தில் நடைபெற்ற முதல் அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டின் தொடர்ச்சியாக இரண்டாவது மாநாடு லிவர்பூலில்  நடை பெறுகின்றது.

  தமிழக எல்லைகளுக்கு அப்பால் திருக்குறள் (Thirukkural beyond the Frontiers of Tamil India) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடக்கும் இம்மாநாட்டில் இந்திய நாட்டுப் பேராளர்களோடு அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை சார்ந்த ஏராளமான அறிஞர்கள் பங்கேற்று ஆய்வுரை வழங்க உள்ளனர். ஸ்காட்லாந்த்து நாட்டைச் சார்ந்த தமிழ்ப் பேரறிஞர் ஆஷர், ருசியா நாட்டைச் சார்ந்த பேராசிரியர் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி,  ஹாங்காங் நாட்டைச் சார்ந்த பேராசிரியர்  கிரஹோரி  ஜேம்ஸ், தென்கொரிய நாட்டைச் சார்ந்த பேராசிரியர் யாங்கிமூன், மலேசிய நாட்டைச் சார்ந்த பேராசிரியர் டத்தோ. டென்னிசன் ஜெயசூரியா, இலங்கை  நாட்டைச் சார்ந்த பேராசிரியர். சண்முகதாஸ் ஆகியோர் இம்மாநாட்டு பேராளர்களில் குறிப்பிடத்தக்கோராவர். 25க்கும் மேற்பட்ட நாடுகளை சார்ந்த அறிஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். இம்மாநாட்டினைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட உள்ளன.

   திருக்குறளுக்கு உலகப்பொதுநூல் (The Book of the World) என்னும் தகுதிப்பாட்டினை யுனெஸ்கோ (UNESCO) மூலம் பெற்றுத்தரும் குறிக்கோளினை மனதிற் கொண்டு நடத்தப்படும் இம்மாநாட்டை சென்னையிலுள்ள ஆசியவியல் நிறுவனம், இங்கிலாந்திலுள்ள லிவர்பூல் ஹோப் பல்கலைக்கழகம், மொரிசியசு நாட்டிலுள்ள புலம் பெயர்ந்து வாழும் அனைத்துலக தமிழர் மையம் (INTAD), தமிழ் லீக் (Tamil League), அமெரிக்க நாட்டின் இல்லினாய்சு மாநிலத்தில் அமைந்துள்ள அனைத்துலகத் தமிழ் மொழி, பண்பாட்டு ஆய்வு நிறுவனம் போன்ற பல்வேறு அமைப்புக்கள் இணைந்து நடத்த உள்ளன. இதனைத் தொடர்ந்து திருக்குறள் உலக மாநாடு (Global Conference) பிரான்சு நாட்டில் யுனெஸ்கோ நிறுவன வளாகத்தில் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதம் 6, 7 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.

   இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டில் பங்கேற்க விழைபவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்குத் தொடர்பு கொள்ளலாம்.

 இயக்குர்,

 ஆசியவியல் நிறுவனம்

 சோழிங்கநல்லூர் PO

 செம்மஞ்சேரி, சென்னை – 600 119

 மின்னஞ்சல்:    info@instituteofasianstudies.com

 தொலைபேசி:   24500831, 24501851

  கைபேசி:             9840526834

 இணையதளம்:  www.instituteofasianstudies.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *