( எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா )

 

 

நீரிழிவு எனும்வார்த்தை பாரினையே கலக்கிறது

யாருக்கு வருமென்று யாருக்கும் தெரியாது

எல்லோரும் நீரிழிவை எதிரியாய்ப் பார்க்கின்றார்

வல்லவரும் நல்லவரும் நீரிழிவால் வாடுகிறார் !

 

நல்லகாலம் இருப்பார்க்கு நீரிழிவு வருவதில்லை

அல்லல்தரும் நோயெனவே அனைவருமே எண்ணுகிறார்

அறுசுவையுள் பலவற்றை அணுகிடவே முடியாமல்

அடக்கிவைக்கும் நோயாக நீரிழிவு வந்திருக்கு !

 

நீரிழிவு இப்போது யாரையுமே விடுவதில்லை

ஏழை பணக்காரென்று பாரபட்சம் பார்ப்பதில்லை

குழந்தைமுதல் கிழவர்வரை கொடுக்கிறது தொல்லையினை

நலமிழந்து வாடிநிற்க நீரிழிவு செய்கிறது !

 

உணவைக் குறையுங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்

நலன்கெடுக்கும் வகையினிலே நடக்காது இருந்திடுங்கள்

பசித்தவுடன் உண்ணுங்கள் புசித்தவுடன் உறங்காதீர்

எதற்குமே பதட்டமதை இயன்றவரை தடுத்திடுவீர் !

 

இனிப்புக் குறைவென்று எழுதிவைத்த உணவுகளை

இயன்றவரை தவிர்த்துவிடல் எல்லோர்க்கும் உகந்ததுவே

காய்கறிகள் உண்டிடுங்கள் கனிகள்தேர்ந் தெடுத்திடுங்கள்

வாழ்வினிலே நிறைவாக வாழ்வதற்கு வழிபிறக்கும் !

 

காசில்லாப் பயிற்சி கனக்காகவே இருக்கிறது

யாருமே அப்பயிற்சி தனைக்கண்டு கொள்வதில்லை

கிடைக்கின்ற நேரமதில் நடைப்பயிற்சி செய்துவிடின்

உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகி வருமன்றோ !

 

நீரிழிவு வியாதிபற்றி நினையாமல் இருக்கையிலே

எப்படியோ வந்தெங்கள் இன்பமதைப் போக்கிவிடும்

விழிப்புணர்வு எனுமுணர்வு எமைவிட்டு அகலுவதும்

வில்லங்கம் வருவதற்கு காரணமாய் இருக்குதன்றோ !

 

வெள்ளம் வருமுன்னே அணைகட்டிக் காப்பதுபோல்

தெள்ளத் தெழிவாக விழிப்புணர்வைப் பெறவேண்டும்

வந்தபின்பு எல்லோரும் நொந்துநிற்கும் நிலைமாறி

வாராமல் காப்பதற்கு வழிவகைகள் தேவையன்றோ !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *