நம் வல்லமை வலைத்தளத்தில் 28 வாரங்களாக வெளிவந்த ‘சிகரம் நோக்கி’ எனும் கட்டுரைகள், இனிய நண்பர் மணிமேகலை பிரசுர மேலாண்மை இயக்குனர் திருவாளர் ரவி தமிழ்வாணன் அவர்கள் உதவியுடன் ஒரு அழகிய புத்தகமாக வெளிவந்திருக்கிறது.

அதன் வெளியீட்டு விழா, மஸ்கட்டில் சீரோடும் , சிறப்போடும் கடந்த 20-11-2017 திங்கள் கிழமை மாலை நடைபெற்றது. இதோ உங்களுக்காக…

அன்புடன்
சுரேஜமீ

சிகரம் தொடுவோம் – புத்தக வெளியீடு

SPT_5185

ஓமான் தலைநகர் மஸ்கட்டில்’ சிகரம் தொடுவோம்’ புத்தக வெளியீடு, ஓமனுக்கான இந்திய தூதர் மேதகு இந்திரமணி பாண்டே அவர்களால் கடந்த 20-11-2017 திங்கள் கிழமை மாலை 7 மணி அளவில் சிறப்பாக நடை பெற்றது.

மேதகு இந்திரமணி பாண்டே அவர்கள் நிகழ்ச்சியைக் குத்துவிளக்கு ஏற்றி, நம் மரபுப் படித் தொடக்கி வைத்தார். மஸ்கட் தமிழ்ச் சங்கத் தமிழாசிரியைகள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர்.

SPT_5315

திருமதி. ரேவதி சுந்தர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் ஸ்ரீனிவாசன் தலைமை தாங்கினார்.

மேதகு இந்தியத் தூதர் அவர்கள் நூலை வெளியிட,

திருமதி. சித்ரா நாராயண் அவர்கள் (Director, Middle East Nursery) , திரு. குமார் மஹாதேவன் (Director & Advisor – Oman Sharpooji Co ), திரு. P .R .ராமகிருஷ்ணன் (CEO, Vision Insurance), திரு. T .கணேஷ் (CFO, Bank Muscat ), திரு. சங்கர் சர்மா (CFO, Bank Dhofar), திரு. P .S .லக்ஷ்மணன் (CFO, National Drilling & Services Co), திரு. ஸ்ரீதர் நாரணசாமி (Ex – Chariman, ICAI-Muscat Chapter), திரு. J. ராஜேந்திரன் (GM, National Steel Fabricators) மற்றும் முனைவர். T . தங்கமணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

SPT_5241

விழாவில் மேதகு. இந்திரமணி பாண்டே அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார். திருமதி. சித்ரா நாராயண் அவர்கள் சிறப்புரை கவித்துவமாக இருந்தது.

ஏனைய சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்துரை வழங்க, நூலாசிரியர் சுரேஜமீ அவர்கள் ஏற்புரை வழங்கினார்.

மஸ்கட் தமிழ்ச் சங்கப் பொருளாளர் திருமதி. விஜயலக்ஷ்மி சந்திர சேகர் நன்றி கூற, விழா இனிதே முடிந்தது.

நிகழ்சசியை மஸ்கட் தமிழ்ச் சங்கப் பொருளாளர் திருமதி. விஜயலக்ஷ்மி சந்திர சேகர் தொகுத்து வழங்கினார்.

இவ்விழாவில் மஸ்கட் வாழ்த் தமிழர்கள் மட்டுமல்லாது, பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.​

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சிகரம் தொடுவோம்

  1. Ram Ram !Well done N Congrats Sunder ! Proud to be your Chiththappa ! Wishing you many more such prestiegeous moments . Blessings to you ,Revathi and kids !

Leave a Reply to Karaikudi Mani Bagavathar

Your email address will not be published. Required fields are marked *