அங்கம் -6 காட்சி -1

வாழ வேண்டும் நீ! அல்லது மதிப்போடு
மீள வேண்டும் வாழ நீ,  குருதியில் மூழ்கி
மாள எதிராகப் போரிட்டு! …. (ஆண்டனி)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

தைபர் நதி ரோமில் உருகிப் போகட்டும்!
ரோம் சாம்ராஜி யத்தின்
தோரண வளையம் குப்புற வீழட்டும்!
என் வசிப்புத் தளம் இதுதான்!
அரசு மாளிகை அனைத்தும் களிமண்!
சாணிப் பூமி யானது,
மானி டனுக்கும் மிருகத் துக்கும்
தீனி யிடுவது வெவ்வேறு முறையில்!
வாழ்வின் புனிதம் இவ்விதம் புரிவது:
ஒருவரை ஒருவர் விரும்பி யிருவர்
ஒன்றாய்ப் பின்னிப் பிணைப்பது  ! …

 (ஆண்டனி)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

என்னை நேசிப்பது நீ உண்மை என்றால்
எவ்வள வென்று சொல்ல முடியுமா ? ….

(கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

கதைச் சுருக்கம்:

கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

நாடகப் பாத்திரங்கள்:

எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி
எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்),
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
•பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

ரோமா புரியின் நிலைமை:  ஃபிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள்.

நேரம், இடம்:

அலெக்ஸாண்டியா, கிளியோபாத்ராவின் மாளிகை. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்:

கிளியோபாத்ரா, சேடிகள், ஆண்டனி, ஆண்டனியின், பாதுகாவலர், படையாட்கள்

காட்சி அமைப்பு:

கிளியோபாத்ராவின் மாளிகையில் ரோமானிய படையினர் •பிலோ, டெமிடிரியஸ் இருவரும் தமது தளபதி ஆண்டனியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கிளியோபாத்ராவும், ஆண்டனியும் தம் சகாக்களோடு உள்ளே நுழைகிறார்கள்.

ஃபிலோ: [வெறுப்புடன்] சகிக்க முடிய வில்லை, டெமிடிரியஸ்! பார், தளபதியின் நிமிர்ந்த தலை தணிந்து விட்டது! தீக்கனல் கக்கி செவ்வாய் போல் செவ்வொளி மின்னிய கண்கள் கறைபட்டு நிலவுபோல் மங்கி விட்டன! அவரது இரும்பு நெஞ்சம் தளர்ந்து, இடையில் கட்டியுள்ள பெல்டும் சூம்பி விட்டது! வெள்ளைப் புறாவைப் போல் மனைவி •புல்வியா ரோமிலே காத்துக் கிடக்க, பளுப்பு மேனி ஜிப்ஸியைத் தேடி வர வேண்டுமா? கிளியோபாத்ரா மோகத்தைத் தணிக்க ஓடி வர வேண்டுமா? சீஸரைக் கவர்ந்த ஜிப்ஸியின் சிலந்தி வலையில் பிடிபடப் போவது அடுத்து ஆண்டனி.

டெமிடிரியஸ்: கிளியோபாத்ரா ஒரு கருப்பு விதவை தெரியுமா? அவளை மணந்தவன் சிறிது நாட்களில் செத்துப் போகிறான். முதல் கணவன் டாலமி, சீஸரின் ஆட்கள் விரட்டி நைல் நதியில் மூழ்கிக் போனான்! இரண்டாம் கணவர் ஜூலியஸ் சீஸருக்கு என்ன ஆனது நமக்குத் தெரியும். அவரும் கொல்லப்பட்டார்! இப்போது ஆண்டனி! அவருக்கு என்ன ஆகுமோ?

[அப்போது வாத்தியக் கருவிகள் முழங்க, அறிவிப்புடன் கிளியோபாத்ரா, அவரது சேடியர், அடிமைப் பெண்கள் பின்சூழ நுழைகிறார். பின்னால் ஆண்டனி அவரது பாதுகாவலர் சூழ வந்து கொண்டிருக்கிறார்]

ஃபிலோ: பார் அங்கே, டெமிடிரிஸ்! எத்தனை கம்பீரமாக கிளியோபாத்ரா நடந்து வருகிறாள்! ஆனால் ஆண்டனி அடிமைபோல் பின்னால் வருவதைப் பார்! வேங்கை போலிருந்த ஆண்டனி, ஜிப்ஸியின் வனப்பில் மயங்கி மது அருந்திய மந்திபோல் நடந்து வருவது எப்படி யிருக்கிறது?

டெமிடிரியஸ்: [கிளியோபாத்ராவுக்கு முன் சென்று] மகாராணி ! ஆண்டனி உங்கள் கவர்ச்சிக்கு அடிமை! அவருக்கு உங்கள் மேல் ……!

கிளியோபாத்ரா: [திரும்பி நோக்கி] யாரது? ரோமானியப் படையாளா? முதலில் என்முன் மண்டியிட்டுப் பேசு! எகிப்தின் விதிகள் உனக்குத் தெரியாதா? யார் உனது படைத் தளபதி?

டெமிடிரியஸ்: [நின்று கொண்டே] மகாராணி! ஆண்டனிதான் எங்கள் தளபதி!

கிளியோபாத்ரா: [கோபத்துடன், சீறி] அறிவு கெட்டவனே! அகந்தையோடு என்முன் நின்று கொண்டு பேசாதே! என் செவியில் எதுவும் விழாது! முதலில் என்முன் மண்டியிட்டுப் பேசு!

டெமிடிரிஸ்: மகாராணி! ரோமில் யாரும் மண்டியிடுவதில்லை! குடியரசு நாட்டில் யாவரும் சமம்!

கிளியோபாத்ரா: முட்டாள்! நீ நிற்பது எங்கே? ரோமிலா? எகிப்த் பூமியில்! மண்டியிடு அல்லது வெளியேறு! காட்டுமிராண்டிகள் ரோமில் செத்த வேந்தர் சீஸரைக் குப்பைக் கூளம்போல் எரித்தார்! எகிப்தில் மாபெரும் பிரமிட் கட்டி, நாங்கள் செத்தவரைப் புதைக்கிறோம்!

ஆண்டனி: [கோபத்துடன், முன்வந்து] கிளியோபாத்ரா! எப்படி ரோமானியனரை நீ காட்டுமிராண்டிகள் என்று சொல்வாய்?

கிளியோபாத்ரா: [முகத்தில் முறுவலுடன்] ஓ! மார்க் ஆண்டனியா? ரோமாபுரியின் முப்பெரும் தளபதியில் ஒருவரா? வருக, வருக, தங்கள் வரவு நல்வரவாகுக!

ஆண்டனி: போதும் உன் சாது மொழிகள்! மன்னிப்புக் கேள் என்னிடம்! காட்டுமிராண்டிகள் எகிப்தியர்! ரோமானியர் அல்லர்!

கிளியோபாத்ரா: மண்டியிட மறுக்கும் உங்கள் மடையனுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டியது நீங்கள்! சீஸரிங்கே தங்கி யிருந்த போது, எங்கள் மாபெரும் நூலகத்தை எரித்தார் உமது ரோமானியர்! அவர் முன்பாகவும் இப்படித்தான் காட்டுமிராண்டிகள் என்று கத்தினேன்! இப்போது மீண்டும் சொல்கிறேன்! சீஸரைக் குப்பையாக எரித்த ரோமானியர் காட்டுமிராண்டிகளே! மகத்தான பீடத்தில் புதைக்கப்பட வேண்டிய மன்னர் உங்கள் சீஸர்! அவர் சடலம் எகிப்தில் கிடந்தால், அவருக்கொரு பிரமிட் கட்டி நிரந்தமாகப் புதைத்திருப்போம். … சொல்லுங்கள், எதற்காக வந்தீர்கள் இங்கே?

ஆண்டனி: [கனிவுடன், குரல் தடுமாறி] கிளியோபாத்ரா! உன்னைக் காணத்தான் வந்தேன்! மூன்றாண்டுகள் ஓடிவிட்டன! எப்போது உன்னைச் சந்திப்போம் என்று கனவு கண்டேன்! நாளும், பொழுதும் என் மனம் உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருந்தது!

கிளியோபாத்ரா: [கிண்டலாக] உங்கள் மனைவி •புல்வியாக்கு உங்கள் கனவைச் சொன்னீர்களா? அவளுக்குத் தெரியாமல் என்னை நினைப்பது சரியா? கட்டிய மனைவி உங்களைச் சும்மா விட்டாளா?

ஆண்டனி: [கண்ணீர் கலங்க] கிளியோபாத்ரா! •புல்வியா இறந்துபோய் விட்டாள்! என்னை விட்டுப் பிரிந்து போய் விட்டாள்! நான் தனித்துப் போய்விட்டேன்.

கிளியோபாத்ரா: [கிண்டலாக] ஏன் பிரிந்து போக மாட்டாள், கணவன் பிறமாதைக் கனவில் நினைத்துக் கொண்டிருந்தால் ! …. அடடா, ஆண்டனி! கண்களில் கண்ணீர் கொட்டுகிறதே! •புல்வியா மீது இப்படி பரிவும் நேசமும் கொண்ட நீங்கள், கிளியோபாத்ராவைத் தேடி வந்தேன் என்று சொல்வது முழுப் பொய்யல்லாவா? ரோமில் உமக்கொரு மங்கை கிடைக்க வில்லையா? சொல், எது உண்மை? •புல்வியா மீது உள்ள நேசமா? அல்லது கிளியோபாத்ரா மீதிருக்கும் காதலா? எது உண்மை? சொல், சொல் ஆண்டனி!

ஆண்டனி: [சற்று மனம் தேறி] •புல்வியா மீது எனக்கு வெறும் பரிவுதான்! ஆனால் நான் நேசிப்பது கிளியோபாத்ராவை! அதுதான் உண்மை! செத்துப் போன •புல்வியாவோடு, அவள் மீதிருந்த என் நேசமும் செத்து விட்டது! உன்னைக் கண்டதும் நேச மனம் புத்துயிர் பெற்று மீண்டும் எழுந்து விட்டது!

கிளியோபாத்ரா: ஓ, அப்படியா? ஆண்டனி! நீ என்னை நேசிப்பது உண்மையானால் எவ்வளவென்று எனக்கு சொல்! நீ நேசிப்பது என்னை என்றால் எனக்கு நிரூபித்துக் காட்டு!

*********************

அங்கம் -6 காட்சி -2

வயது ஏறினும் வதங்காது அவள் மேனி!
வழக்க மரபுகளால் குலையாது, வாலிபம்
வரையிலா வெவ்வேறு வனப்பு மாறுபாடு! …..
உடல் நளினத்தை விளக்கிடப் போனால்,
எவரும் வருணித்து எழுத இயாலாது ! …..
தோரணம் தொங்கும் அலங்காரப் பந்தலில்
ஆரணங்கு படுத்தி ருந்தாள், அவளது
பொன்னிற மேனி, இயற்கை மிஞ்சியக்
கற்பனைச் சிற்பம்,
வீனஸ் அணங்கினும் மேம்படும் சிலை!

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

படகில் அமர்ந்தது அவள் பொன்மய ஆசனம்!
கடல் நீரும் தங்கமய மாகும் அதனால்!
படகின் மேல்தளம் முழுதும் பொன்தட்டு!
மிதப்பிகள் நிறம் பழுப்பு!
பரவிடும் நறுமணத் தெளிப்பு! அதனால்
தென்ற லுக்கும் காதல் நோய் பற்றும்!
படகின் துடுப்புகள் அனைத்தும் வெள்ளி!
ஊது குழலின் தாளத்துக் கேற்ப
கடல் அலைகளை உதைத்துத் துடுப்புகள்
வேகமாய்த் தள்ளும் காதல் துடிப்பு போல்!
அவள் மேனி வனப்பை விளக்க நினைப்பின்,
எவர்தான் வருணித்து எழுதிட முடியும் ?

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

என்னை நேசிப்பது நீ உண்மை என்றால்
எவ்வளவு என்று சொல்ல முடியுமா ? ….(கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

 

நாடகப் பாத்திரங்கள்:

எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:

ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி
எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்),
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
ஃபிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

ரோமா புரியின் நிலைமை: ·பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி ·புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள்.

நேரம், இடம்:

அலெக்ஸாண்டியா, கிளியோபாத்ராவின் மாளிகை. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்:

கிளியோபாத்ரா, சேடிகள், ஆண்டனி, ஆண்டனியின், பாதுகாவலர், படையாட்கள்

காட்சி அமைப்பு:

கிளியோபாத்ராவின் மாளிகையில் ரோமானிய படையினர் ·பிலோ, டெமிடிரியஸ் இருவரும் தமது தளபதி ஆண்டனியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கிளியோபாத்ராவும், ஆண்டனியும் தம் சகாக்களோடு உள்ளே நுழைகிறார்கள்.

கிளியோபாத்ரா: ஓ, அப்படியா ஆண்டனி! நீ என்னை நேசிப்பது உண்மையானால் எவ்வளவென்று எனக்கு சொல்! நீ நேசிப்பது என்னைத் தவிர வேறு எவருமில்லை என்றால் இப்போது நிரூபித்துக் காட்டு!

ஆண்டனி: கிளியோபாத்ரா! உன்னை நான் நேசித்தது இன்றல்ல, நேற்றல்ல! என் காதல் காலம் கடந்தது! எல்லை கடந்தது! இனம் கடந்தது! நிறுத்துக் கூற முடியாது அதன் அளவை என்னால்! நிரூபித்துக் காட்ட முடியாது என்னால்! பல்லாண்டுக்கு முன் உன் தந்தையைக்கு உதவிட நான் வந்த போது, இளம் மங்கையாக இருந்த நீ அப்போதே என்னை நீ கவர்ந்தாய்! உன்னை நான் நேசித்தேன். சீஸரைக் காண நீ ரோம் வந்த போது உன் கண்கள் சீஸரை நோக்கின; என் விழிகள் உன்னைத் தேடின! சீஸரை நீ முத்தமிட்ட போது, என் உதடுகள்தான் உன் அதரங்களைச் சுவைத்தன! சீஸரை நீ அணைத்த போது உன் ஆலிங்கனம் என் மார்பைத்தான் தழுவிக் கொண்டது! சீஸர் இன்றில்லை! இருப்பது நீயும், நானும்தான் இப்போது!

கிளியோபாத்ரா: [சற்று கவலையுடன்] ஆனாலும் சீஸரை என்னால் மறக்க முடியவில்லை! சீஸர் என் தேவர்! சீஸர் என் அலெக்ஸாண்டர்! சீஸர் என் ·பாரோ வேந்தர்! அவரைப் போலொரு தீரர் ரோமிலினி எப்போது பிறப்பார்? அவரை இழந்தது ரோம் மட்டுமில்லை! எகிப்தும் அவரை இழந்து விட்டது! எகிப்த் ராணி கிளியோபாத்ராவும் அவரின்றி ஏங்கிக் கொண்டிருக்கிறாள் [முகத்தைத் திருப்பி கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறாள்.

ஆண்டனி: கிளியோபாத்ரா! சீஸருக்காக என் கண்களும் அன்றும் அழுதன! இன்றும் அழுகின்றன! நாளை தினமும் அவை ஏங்கித் தவிக்கும். உண்மையாக உனக்குத்தான் சீஸர் மீது நேசம்! அவருக்கு உன்மீது நேசம் கிடையாது; உன்மீது சீஸர் கொண்டது வெறும் மோகம்!

கிளியோபாத்ரா: [சினத்துடன்] அப்படி நீங்கள் சொல்வது தவறு! என்மீது சீஸருக்கு உயிர்! என் மகன் மீது சீஸருக்கு உயிர்! இப்படி வஞ்சகமாகப் பேசி என்னை நீங்கள் கவர முடியாது!

ஆண்டனி: [சிரித்துக் கொண்டு] சீஸருக்கு யார் மீதும் பாசமோ, பற்றோ, நேசமோ உள்ளதாகத் தெரியவில்லை எனக்கு! நிச்சயம் உன் மீது கிடையாது! உன் மகன் மீது பாசம், நேசமிருக்கலாம், அவரது புதல்வன் என்பதால்…!

கிளியோபாத்ரா: [வெடிப்பாக] பிடிக்காத என்னை எப்படி மணம் புரிந்தார் சீஸர்? நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு!

ஆண்டனி: [சிரித்துக் கொண்டு] கிளியோபாத்ரா! திருமணம் நடந்தது உனக்கும் சீஸருக்கு மில்லை! ரோமுக்கும் எகிப்துக்கும் நடந்த தேசத் திருமணம் அது! சீஸர் செத்ததும் எகிப்த் விதவை ஆகி விட்டது! எகிப்து இனி ரோமைப் பற்றி ஏங்குவது சரியில்லை. [சிரிக்கிறான்]

கிளியோபாத்ரா: [சோகமாக] அப்படியானால் கிளியோபாத்ராவை விதவை என்று கேலி பண்ணுகிறீர்!

ஆண்டனி: ஆண்டனி அப்படிச் சொல்ல வில்லை! கிளியோபாத்ராதான் அப்படிச் சொல்கிறாள்! அறுந்து போன உறவைப் பிணைக்கத்தான் ஆண்டனி எகிப்துக்கு வந்திருக்கிறான்! ஏன் வந்தாய் என்று கேட்டாய் அல்லவா? அதற்குப் பதிலிதுதான்.

கிளியோபாத்ரா: [கவலையோடு] சீஸர் என்னுயிர் நேசர்! அவரின்றி என் மனம் தனிமையில் நோகும்! தனித்துப் போனேன் நான்! பகலிலும் அவர் நினைவு! இரவிலும் அவர் நினைவு! கனவிலும் அவர்தான்! நினைவிலும் அவர்தான்! காலியான என் நெஞ்சிலினிக் குடியேறுவது யார்? எகிப்தின் பாலைவனம் என்னுள்ளத்தில் பரவி விட்டது! பாலை நெஞ்சில் நைல் நதி மீண்டும் என்னை எப்போது தொடும்? சீஸர் உடலைக் கொண்டுவந்து எகிப்த் பிரமிடில் அடக்கம் செய்திருக்க வேண்டும்! ·பாரோ வேந்தரில் ஒருவரான சீஸரின் சடலம் பிரமிடில் புதைக்க வேண்டியது. மடையர்கள் சடலத்தை ரோமில் எரித்துச் சாம்பலாக்கி விட்டார்! அது வேறு என் மனதை வாட்டுகிறது! நான் செய்ய முடியாமல் போன பெரிய தவறாகத் தெரிகிறது.

ஆண்டனி: எனக்கும் ரோமாபுரி சலித்து விட்டது! புல்வியா செத்த பிறகு முற்றிலும் கசந்து விட்டது! உன்னைப் போல் நானும் இப்போது ஒரு தனிமரம், கிளியோபாத்ரா! அதனால்தான் எகிப்துக்கு வந்தேன்! பிரம்மாண்டமான அந்த பிரமிட் ஒன்றில் ஆயிரம், ஆயிரம் ஆண்டுகள் கண்துஞ்ச வேண்டும் என்று நான் கனவு கண்டதுண்டு!

கிளியோபாத்ரா: ஆண்டனி! அறிவோடுதான் நீங்கள் பேசுகிறீர்களா? பிரமிடில் நீங்கள் எப்படி உறங்க முடியும்? முழுக்க முழுக்க நீங்கள் ஒரு ரோமன்! ரோமா புரியாளும் முப்பெரும் தளபதிகளில் மூத்தவர் நீங்கள்! நீங்கள் எப்படிப் ·பாரோ மன்னரின் பரம்பரை ஆவீர்?

ஆண்டனி: ரோமானியாரான சீஸருக்கு மட்டும் எப்படி பிரமிட் கோபுரம் சொந்தமாகும்?

கிளியோபாத்ரா: சீஸர் என்னைத் திருமணம் செய்து ·பாரோ மன்னரின் பரம்பரை ஆகிவிட்டார்!

ஆண்டனி: [சிந்தித்து] கிளியோபாத்ரா! சீஸரின் நிழல்தான் நான்! சீஸர் சென்ற பாதையைப் பின்பற்றப் போகிறேன் நான்! சீஸர் வழியே என் வழி! சீஸர்தான் என் குரு!

கிளியோபாத்ரா: [சட்டெனக் குறுக்கிட்டு] அப்படியானால் என்னைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறீரா ஆண்டனி? … நீங்கள் சீஸர் ஆக முடியாது, அவர் வழியைப் பின்பற்றினாலும்.

ஆண்டனி: கிளியோபாத்ரா! சீஸர் வயதானவர்! நான் வாலிபன்! சீஸருக்குக் காதலிகள் பலர்! எனக்குக் காதலர் யாருமிலர்! நான் தனித்துப் போனவன்! நீயும் தனித்துப் போனவள்! உன்னை மணக்க என்ன தகுதி யில்லை எனக்கு? சொல்!

கிளியோபாத்ரா: [சினத்துடன்] என்னைத் திருமணம் செய்த சீஸருக்கு என்னவாயிற்று என்று தெரியும் உங்களுக்கு! சீஸரைப் பற்றி ரோம் என்ன சொல்லியது என்று தெரியும் உங்களுக்கு! என்னைப் பற்றி அசிங்கமாக ரோமாபுரி என்ன சொன்னது என்று தெரியும் உங்களுக்கு! ரோமைப் பற்றி ஏதும் கவலைப் பட வில்லையா நீங்கள்?

ஆண்டனி: [வெகுண்டு] தைபர் நதி ரோமா புரியில் உருகினால் என்ன? வெற்றி வளையம் ரோமில் குப்புற வீழ்ந்தால் என்ன? எனக்கொரு கவலை யில்லை! நான் வாழப் புகுந்த தளம் எகிப்துதான்! ராஜ மாளிகை வெறும் களிமண்! சாணிப் பூமி மானிடனுக்கும், மிருகத்துக்கும் தீனி அளிப்பது வெவ்வேறு விதங்களில்! நான் மனிதன்! தனிமைத் தளையை அறுத்துப் பாசமுடன் ஒருத்தியை நேசித்துப் பிணைத்துக் கொள்ள விரும்புபவன்! ரோமா புரியில் மிருகங்கள் பெருத்து விட்டன! ஒரு காலத்தில் மனிதர் மிருகத்தை வேட்டை ஆடினார்! இப்போது ரோமில் மிருகங்கள் மனிதரை வேட்டை ஆடுகின்றன! நான் எனது துணைப் பறவையைத் தேடி வந்திருக்கிறேன்!

கிளியோபாத்ரா: [கேலியாகச் சிரித்து] உன் துணைப் புறா எகிப்தில் இருக்கிறதா? … ஆமாம் ஒன்று நான் தெரிந்து கொள்ள வேண்டும் முதலில். … நேச விருப்பமின்றி பாசம் மட்டும் கொண்டு புல்வியாவை எப்படி மணந்தீர்?

ஆண்டனி: திருமணம் கணநேரத்தில் முடிவில் செய்தது! திருமணம் முடிந்து உடல்கள் முத்தமிட்ட பிறகு ஏமாற்றம் என்னைத் தொடர்ந்தது! புல்வியாக்கு ஏற்ற கணவனில்லை நான் என்று கண்டு கொண்டேன்! ஆமாம், என் துணைப்புறா எகிப்தில்தான் உள்ளது.

கிளியோபாத்ரா: தப்பு! தப்பு! தப்பு! புல்வியா உமக்கேற்ற மனைவி யில்லை என்பதைத் தானே கண்டு கொண்டீர்! நீவீர் மணக்க விரும்பும் துணைப்புறா ரோமுக்குக் குடிப்பெயராது என்று தெரியுமா?

ஆண்டனி: தெரியும்! அதனால்தான் ஆண்டனி எகிப்துக்குக் குடிப்பெயர்ப்பு செய்யத் துணிந்து விட்டான். கிளியோபாத்ரா! ஏனிப்படிக் கண்ணாமூச்சி விளையாடுகிறாய்?

கிளியோபாத்ரா: ஆண்டனி! நீங்கள் என்னைத் தேடி எகிப்துக்கு வருவீரா என்று நான் ஏங்கியதுண்டு! நீங்கள் வரும் வழிமேல் விழி வைத்திருந்தேன்! நீங்கள் வருவீர் என்று அறிவேன் நான்! சீஸர் விட்டுப் போன என் நெஞ்சக் கூண்டை ஆண்டனிக்காகத் திறந்து வைத்தேன்! நீங்கள் என் நெஞ்சக் கதவைத் தட்டுவீர் என்று தெரியும் எனக்கு! என் கனிந்த உதடுகளைத் தேடி உங்கள் உலர்ந்த உதடுகள் ஓடி வருவதைக் கனவில் கண்டேன்! என் கனவில் இப்போதெல்லாம் சீஸர் வருவதில்லை! நீங்கள் சொன்னது உண்மைதான்! சீஸர் என்னை நேசித்திருந்தால் அவரல்லவா என் கனவில் வர வேண்டும்? உங்கள் கனவில் கிளியோபாத்ரா வருகிறாளா? தினமும் வருகிறாளா? அப்படி வந்தால் என்றைக்கு வந்தாள் என்பது நினைவிருக்கிறதா?

ஆண்டனி: கண்ணே, கிளியோபாத்ரா! கனவில் நீ! நினைவில் நீ! என் கண்ணில் படும் பெண்கள் எல்லாம் உன்முகம் கொண்டுள்ளத்தைக் கண்டேன்! காட்சி எல்லாம் நீ! ரோமை விட்டு நீ போனதும் என் நெஞ்சம் காலியாய்ப் போனது! மெய்யாகப் பாதி உயிர் போனது! எனது மறுபாதியைத் தேடி எகிப்துக்கு வந்திருக்கிறேன். எனக்கு எகிப்த் வாசல் கதவுகள் வரவேற்பு அளிக்கும் என்று தெரியும். ரோமாபுரிக்கு நான் மீளப் போவதில்லை! எகிப்தே நாடே என் சொர்க்கபுரி! கடைசிக் காலத்தைக் கடத்தப் போகும் புனிதத் தளம்!

*********************

அங்கம் -6 காட்சி -3

 (ஆண்டனி, பிரிந்து செல்லும்)
மெல்லோசை கேட்டால் (கிளியோபாத்ரா)
அக்கணமே உயிரை விடுவாள்!
ஒன்று மில்லா சிறு நிகழ்ச் சிக்கும்
பன்முறை அப்படிச் சாவதை நான்
கண்டுளேன் ; மரணம் மீதவள்
கொண்டுள்ள மோகம் மிகைதான்.

எனோபரஸ்

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

நாடகப் பாத்திரங்கள்:

எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:

ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி
எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்),
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
ஃபிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள்.

நேரம், இடம்:

அலெக்ஸாண்டியா, கிளியோபாத்ராவின் மாளிகை. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்:

கிளியோபாத்ரா, சேடிகள், ஆண்டனி, ஆண்டனியின், பாதுகாவலர், படையாட்கள்

காட்சி அமைப்பு:

கிளியோபாத்ராவின் மாளிகையில் ரோமானிய படையினர் •பிலோ, டெமிடிரியஸ் இருவரும் தமது தளபதி ஆண்டனியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கிளியோபாத்ராவும், ஆண்டனியும் தம் சகாக்களோடு நிற்கும் போது, எனோபரஸ், சார்மியான், அலெக்ஸாஸ், ஜோதிடர் உள்ளே நுழைகிறார்கள்.

சார்மியான்: அலெக்ஸாஸ் பிரபு! என்னருமைப் பிரபு! அன்றைக்கு மகாராணி கிளியோபாத்ராவிடம் நீங்கள் புகழ்ந்த அந்தப் பெயர் போன ஜோதிடரை எங்கே? என் கையைக் காட்ட வேண்டும். என் திருமணத்தைப் பற்றிக் கேட்க வேண்டும். எத்தனை மனைவிகள் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்? செல்வந்த மாதரா அல்லது சிங்கார மாதரா என்று அறியவும் ஆசை!

அலெக்ஸாஸ்: நம்மை நோக்கி அந்த ஜோதிட மேதை அதோ வருகிறார்!

ஜோதிடர்: [சிரித்துக் கொண்டு] மாளிகை ராணி, மன்னர் தேடும் என்னை எந்த வழிப்போக்கனும் காண முடியாது! யார் நீங்கள்? பொற் காசுகள் உள்ளனவா?

சார்மியான்: இவரா அந்த ஜோதிடர்? ஏதோ வட்டிக் கடைக்காரர் போலிருக்கிறது! இவரா புகழ்பெற்ற ஜோதிடர்? ஜோதிட சிகாமணியே! உங்களுக்கு மட்டும் எப்படி எதிர்காலம் தெரிகிறது? கடந்த காலம் தெரிகிறது! உங்களுக்கு நிகழ் காலம் தெரியுமா?

ஜோதிடர்: [சினத்துடன்] எக்காலமும் அறிந்தவன் நான்! உங்களுக்கு வேண்டியது போனதா? வருவாதா? அல்லது நிகழ்வதா? இயற்கையின் முடிவில்லா மர்ம, மாய நூலில் அடியேன் அறியாதன எதுவு மில்லை!

அலெக்ஸாஸ்: சார்மியான்! உன் கையைக் காட்டு, ஜோதிடர் என்ன சொல்கிறார் பார்க்கலாம்.

சார்மியான்: [கையை நீட்டி] ஜோதிட சிகாமணி! எனக்கு நல்ல சேதிகளைக் கொடுங்கள்! எனக்குத் திருமணம் எப்போது? செல்வப் பெண்ணா? அல்லது சிங்காரப் பெண்ணா?

ஜோதிடர்: அட, கடவுளே! என்னால் கொடுக்க முடியாது! செல்வப் பெண்ணைத் தேடிப் போனால் சிங்காரப் பெண் கிடைப்பாள்! சிங்காரப் பெண்ணைத் தேடிப் போனால், செல்வப் பெண் கிடைப்பாள்! சிங்காரப் பெண் உன் பையில் கையை விடுவாள்! செல்வப் பெண் பார்க்க அசிங்கமாய் இருப்பாள்! கடந்த காலம் ஓர் சதுராட்டம்! எதிர்காலம் ஒரு புதிராட்டம்! நிகழ் காலம் ஓர் அரங்கேற்றம்! எதைப் பற்றியும் நான் சொல்வேன்!

சார்மியான்: சொல்லுங்கள், சொல்லுங்கள்! எனக்கு நல்லதாகப் பார்த்துச் சொல்லுங்கள்.

ஜோதிடர்: இப்போது இருப்பதை விட நீ வெள்ளையாக இருக்க வேண்டியவன்.

சார்மியான்: [முகத்தைச் சுருக்கி] என் தோலின் நிறத்தைச் சொல்கிறீரா? யாரதை உம்மிடம் கேட்டது? வெள்ளையாக இருந்தால் என்ன? கருப்பாக இருந்தால் என்ன? காசு நிரம்பச் சம்பாதிப்பேனா? பணமில்லாமல் இருந்தால், மனைவியாவது கொண்டு வருவாளா?

ஜோதிடர்: [கைரேகையை உற்று நோக்கி] முகத்தில் சுருக்கு விழாமல் பார்த்துக் கொள்.

சார்மியான்: ஜோதிடரே! நீர் என் முகத்தைப் பார்த்தா சொல்கிறீர். கைரேகையைப் பார்க்கப் பணம் கொடுத்தால் முகரேகையைப் பார்ப்பதா?

அலெக்ஸாஸ்: அவமரியாதை செய்யாதே அவரை! ஜோதிடர் மகாராணிக்கு ஜோதிடம் சொல்பவர். கோபம் உண்டாக்கினல் எதுவும் சொல்லாமலே போய்விடுவார். அவர் சொல்வதைக் கேட்டுக் கொள்.

ஜோதிடர்: உன் காதலி மீது நீ அன்பைச் சொரிய வேண்டும். மனைவி இருந்தால் அவளை மிகவும் நேசிக்க வேண்டும் நீ.

சார்மியான்: [சிரித்துக் கொண்டு] மதுபானம் குடித்து என் கல்லீரலைச் சூடாக்கலாம் காதல் புரிய. எனக்கு மனைவியு மில்லை, காதலியு மில்லை! நல்ல ஜோதிடமிது. பேரதிர்ஷ்டம் வருவதுபோல் தெரியுது! மூன்று அரசிளங் குமரிகளைக் காலையில் மணந்து மாலையில் விதவை ஆக்க வேண்டும்!

அலெக்ஸாஸ்: மனைவி எப்படி விதவை ஆவாள், நீ சாகாமல்? அதுவும் மூன்று தரம் எப்படிச் சாவாய் நீ? கொஞ்சம் யோசித்துப் பேசு!

ஜோதிடர்: [கூர்மையாக நோக்கி] நீ எந்த ராணிக்குப் பணிபுரிகிறாயோ, அவளை விட நீண்ட ஆயுளோடு வாழ்வாய்!

ஆண்டனி

சார்மியான்: [சிரித்துக் கொண்டு] ஓ! எனக்கு நீண்ட ஆயுளா? பெருமகிழ்ச்சி! இரண்டு அல்லது மூன்று தரம் திருமணம் செய்து கொள்ளலாம்.

அலெக்ஸாஸ்: ஜோதிட சிகாமணி! என்ன சொல்கிறீர்? அப்படியானால் கிளியோபாத்ராவுக்குக் குறைந்த ஆயுளா? சார்மியான் ஆயுளைப் பற்றி யார் கவலைப் படுகிறார்? கிளியோபாத்ரா ஆயுளைப் பற்றி சார்மியான் கைரேகை எப்படிக் காட்டும்? ஜோதிடரே! நீவீர் சொல்வது உண்மைதானா?

சார்மியான்: சத்தமாகப் பேசலாமா பிரபு! அரண்மனைக்குச் சுவரிலும் காது! தரையிலும் காது! ராணியின் காதில் விழுந்தால், உங்கள் கழுத்தல்லவா துண்டிக்கப்படும்! மகாராணியைப் பற்றி நாம் பேச வேண்டாம்.

அலெக்ஸாஸ்: ஐரிஸ் சீமாட்டி! வா, வந்து உன் கையை ஜோதிட சிகாமணியிடம் காட்டு!

ஐரிஸ் சீமாட்டி: [ஜோதிடரிடம் கையைக் காட்டி] எனக்கு எத்தனை கணவர் சொல்லுங்கள்?

சார்மியான்: [வியப்புடன்] ஐரிஸ் கண்மணி! எப்போது நீ உன் கணவனை விலக்கப் போகிறாய்?

ஐரிஸ்: அதை எல்லாம் நான் சொல்ல மாட்டேன்! என் வீட்டு ரகசியம் கூரையைத் தாண்டி வராது.

சார்மியான்: அந்த ரகசியம்தான் உன் வாயிலிருந்து உதிர்ந்து விட்டதே! எத்தனை திருமணம் என்று கேட்பதின் அர்த்தம் என்ன? …. இப்போதே என் பெயரைப் போடுகிறேன், அடுத்த கணவன் பட்டியலில்! உன்மீது எனக்கு மோகம் உண்டு சிறு வயது முதலே! எனக்கு வீடு, வாசல், தோட்டம், வயல் எல்லாம் உள்ளன! 40 வயது எனக்கு! இது என் அரை ஆயுள்! முழு ஆயுள் எனக்கு 80 வரை என்று வேறு ஜோதிட சிகாமணி சொல்லி யிருக்கிறார். ஐரிஸ், கண்மணி! ஏற்றுக் கொள்வாயா என்னை அடுத்த கணவனாக?

ஐரிஸ்: [சிரித்துக் கொண்டு] அடாடா! எப்படிப் பொருத்தம் இருக்கும்? உமது வயதில் பாதி வயது நான்! தகப்பனுக்கு மகள் தாரம் போலிருக்கும்! உமது மகளுக்குத் தர வேண்டிய சீதனங்களை எனக்கு ஏன் அளிக்க வேண்டும்?

ஜோதிடர்: ஐரிஸ் சீமாட்டி! நீண்ட காலம் வாழ்வாய் நீயும்! உன் ராணி காலத்துக்கும் பிறகும் வாழ்வாய்.

சார்மியான்: ஜோதிடரே! மகாராணி கிளியோபாத்ரா ஆயுளைப் பற்றிப் பேசக் கூடாதென்று சொன்னேன். உன் காதில் விழவில்லையா? மெதுவாகப் பேசுங்கள் என்றேன்! அதுவும் உம் காதில் விழவில்லை. .. ஐரிஸ் கண்ணே! பார்த்தாயா? நீயும் நானும் நீண்ட காலம் வாழப் போகிறோம். மகாராணி ஆயுளுக்குப் பிறகும் ஒன்றாய் வாழலாம்!

ஐரிஸ்: ஏன் முடியாது? தனித் தனியாக மணந்து வெவ்வேறு குடும்பங்கள்! [உஷ்] ஈதோ மகாராணி வருகிறார். வாயை மூடு!

[அப்போது கிளியோபாத்ரா, தன் சகாக்களுடன் நுழைகிறாள்]

கியோபாத்ரா: [கோபமாக] ஐரிஸ்! என் சீமான், ரோமானியக் கோமான் எங்கே என்று தெரியுமா? இங்கே இல்லையா?

ஐரிஸ்: [சிரம் தாழ்த்தி வணங்கி] மகாராணி! அவரை அடியாள் காண வில்லை! பார்த்து வருகிறேன்.

கிளியோபாத்ரா: தேடி வந்து எனக்குச் சொல்! உடனே சொல்! போ விரைவில். [ஐரிஸ் ஓடிச் செல்கிறாள்] ஆண்டனிக்கு மோகமுண்டு, போகமுண்டு! ரோமின் மீது தாகமுண்டு! ஏதாவது தகவல் வந்ததா ரோமிலிருந்து? என்னை தேடி எகிப்துக்கு வந்து என்னிடம் கண்ணாம்மூச்சு விளையாடுகிறார்! எங்கே ஆண்டனி! எனோபரஸ்! போ நீ ஒரு பக்கம்! தேடிப் பிடித்து வா, ஆண்டனியை!

அலெக்ஸாஸ்: ஈதோ எமது சீமான் வருகிறார். உங்களை நோக்கித்தான் வருகிறார். [ஆண்டனி, ஒரு தூதுவன் பின்வர நுழைகிறான்]

கிளியோபாத்ரா: [வேகமாக] நம்மை ஆண்டனி பார்க்கக் கூடாது; வாருங்கள் போவோம். [கிளியோபாத்ரா, அலெக்ஸாஸ், ஐரிஸ், சார்மியான், ஜோதிடர் அனைவரும் விரைவாக வெளியேறுகிறார்]

ஆண்டனி: [உணர்ச்சியோடு, கவலையுடன்] என்ன ஆனது என் மனைவிக்கு? விபரமாகச் சொல்! புல்வியா எப்படிச் செத்தாள்? எங்கே செத்தாள்?

தூதுவன்: உங்கள் மனைவி புல்வியா போர்க்களத்துக்கு வந்தார் முதலில்!

ஆண்டனி: என் சகோதரன் லூஸியஸை எதிர்த்துத்தானே!

தூதுவன்: ஆமாம் பிரபு. ஆனால் பிறகு அவர்களுடன் சேர்ந்து கொண்டு புல்வியா அக்டேவியஸைத் தாக்க முனைந்தார். முத்தளபதிகளில் மூர்க்கரான அக்டேவியஸின் ரோமானியப் படை முன்பாக யாரும் நிற்க முடியுமா?

ஆண்டனி: என்ன கோர விளைவுகள் நிகழ்ந்தன வென்று சொல்? புல்வியாவுக்கு என்ன ஆனது என்று முதலில் சொல்? அக்டேவியஸ் வல்லமையைப் பற்றி யார் கேட்டார்?

தூதுவன்: சொல்லத் துணிவில்லை எனக்கு. எப்படிச் சொல்வேன் பிரபு? உங்கள் மனைவிக்கு என்ன ஆனது என்று முழுவதும் தெரிய வில்லை பிரபு!

ஆண்டனி: யாரங்கே வருகிறார்? சரி நீ ரோமுக்குப் போய் என் வீட்டில் நான் சொன்னதாகச் சொல்! எகிப்தில் நலமாக உள்ளேன் என்று சொல்! கிளியோபாத்ரா மாளிகையில் விருந்தினன் ஆக இருப்பதாகச் சொல். எனக்கு எல்லா வசதிகளும் உள்ளதாகச் சொல்!

முதல் தூதுவன்: அப்படியே செய்கிறேன் பிரபு.

[முதல் தூதுவன் போகிறான். இரண்டாம் தூதுவன் வருகிறான்]

இரண்டாம் தூதுவன்: [அழுதுகொண்டே] பிரபு! பிரபு! உங்கள் மனைவி புல்வியா போர்க்களத்தில் இறந்து போனார்.

ஆண்டனி: கேள்விப்பட்டேன். எங்கே இறந்தாள்? எப்படி இறந்தாள்? அதை நான் தெரிந்து கொள்ள வேண்டும். விபரமாகச் சொல்!

தூதுவன்: ஸிசியான் என்னும் இடத்தில் இறந்து போனார், பிரபு. போர்க்களத்தில் கடும் நோய் தாக்கியது. வந்த நோயிக்கு மருந்து எடுத்துக் கொள்ள மறுத்தார் என்று தெரிகிறது. சாகும் போது உங்கள் நினைவில் புலம்பினார். உங்களைத் தேடினார்! உங்களைக் காண விரும்பினார்! ஆண்டனி எங்கே? ஆண்டனி எங்கே என்று அலறினார்.

ஆண்டனி: [மிக்க வருத்தமுடன்] போய்விட்டாயா புல்வியா? உன்னைத் தனித்துப் போகவிட்டேன்! நானிப்போது தனித்துப் போய்விட்டேன்! புல்வியாவின் மரணத்துக்குப் பாதிக் காரணம் நான்! என் அரசியல் வாழ்க்கையில் முழுப் பங்கு எடுத்தாள். அவள் அடுப்பறையில் குழல் ஊதும் மாதில்லை! ஈட்டி எடுத்துப் போரிடுபவளும் இல்லை! போர்த் தளபதிகள் அருகிலிருந்து உதவி புரியும் மந்திரி அவள்! அவள் இப்போதில்லை. உயிருடன் உள்ள போது அவள் மீது எனக்கு வெறுப்பு மிகுதி. செத்த பிறகு அவள் மீது பரிவு பாசம் ஏற்படுகிறது. கள்ளி கிளியோபாத்ரா மேல் கொண்ட மோகத்தில் புல்வியாவை மறந்தேன். அவள் மன நோயிக்கும், நிஜ நோயிக்கும் காரணம் நான்தான். புல்வியா! மன்னிப்பாயா நீ? அவள் அருகிலிருந்து அவளை நோயிலிருந்து காப்பாற்றி இருக்கலாம் … ஆனால் கட்டழகி கிளியோபாத்ராவை எப்படி மறப்பது? மோகினியை எப்படித் துறப்பது? புல்வியாவை மறக்க வைத்தவள் இந்தக் கள்ளி! இவளை விட்டுவிட்டு ரோமா புரிக்கு நான் மீள வேண்டும்.

*********************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *