கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”மந்திக்கும், பால்பசு மாட்டுக்கும், பேதத்தை
சிந்திக்கா கண்ணன், சமத்துவ -நந்தன்
சுகுமாரன் நெய்வெண்ணை சோரன்வாத் சல்ய,
வெகுமானம் கேசவ் வரைவு’’….!
”மந்திமனம் மண்ணிலே மண்டியிட்டுக் கண்ணனின்
பந்திக்கு முந்தும் பரவசத்தை, -தந்தீர்(கேசவ்): –
கிருஷ்ணப் பிரேமியென்றார் கோபுலு ஆசான்,
பிரஷ்ணப்(BRUSH) பிரேமிவெண் பாக்கு”….கிரேசி மோகன்….!