கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
காளிக்கு அண்ணன் கார்முகில் வண்ணன்
காளிங்க நர்த்தனம் ஆடிக் களைத்தவன்
கோளரி மாதவன் கோவிந்தன் நான்முகன்
தூளியில் ஆடித் தூங்க வருகவே….கிரேசி மோகன்….!
“நாலா யிரக்கண்ணன் நான்முகன் தொட்டிலில் –
ஓலாவில்(taxi ) போவதுபோல் ஓய்ந்திருக்க -தாலாட்டு –
மாலோலர் தூங்கிட மாதா யசோதாவின் –
பாலூறும் பாடல்வெண் பா “….கிரேசி மோகன் ….!
Yashoda sings a lullaby to Krishna describing the gem-adorned cradle given by Brahma and reminisces his avatar as Vamana. (Inspired by the 4000 divine songs of the Azhwars) #Krishnafortoday