க. பாலசுப்பிரமணியன்

 

திருவானவண்டூர் – அருள்மிகு கோசாலப்பன் பெருமாள்

madhava-Perumal1o

வாழ்க்கைப் போரின் வசந்தங்கள் முடிய

வந்தனர் பாண்டவர் வனங்களைத் தேடி

வேதவன் கண்ணன் காட்டிய வழியில்

விடுதலை பெற்றிட வாழ்வை வென்றிட !

 

கோவினம் காத்த கோவிந்தன் நினைவில்

கோவிலைக் கட்டினான் பம்பையின் கரையில்

கோமகன் நகுலனும் கோசாலக் கண்ணனனை

கோவிலில் வைத்துக் குறைகள் சொல்லிட !

 

பம்பையின் கரையில் பாம்பணை அப்பனாய்

பண்டரிபுரத்திலே பாசத்தில் புண்டரி காட்சனாய்

பாதங்கள் போற்றிட கயையிலே விஷ்ணுவாய்

பாலங்கள் அமைத்தாய்  பக்தர்கள் நெஞ்சுடன் !

 

கண்களில் நிறைந்ததோ கருணையின் கடலே

சொற்கள் படைத்ததோ அமுதெனும் கீதை

கைகளில் அபயம்  காலங்கள் காத்திடும்

கண்ணனின் நெஞ்சமோ காதலின் சுரங்கம் !

 

வெம்பிய நெஞ்சங்களின் வேதனை களைந்திட

நம்பிய உள்ளங்கள் நலமுடன் வாழ்ந்திட

மங்கிய பாதைகளில் மங்களம் பெருகிட

மறவாமல் வணங்குவோம் மாதவன் மலரடி !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *