கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
“பிள்ளை பிரகலாதர் உள்ள இடத்தினில் –
கிள்ளைக் கரகோதை குந்தினாள்: -உள்ளன்
புடனே நரசிம்மம் பாவையை ஏந்தி –
உடனே அள்ளித்தார் உயர்வு”….
”சிம்மா சனமமர்த்தி ஸ்ரீவில்லி மங்கைக்கு
நம்மாள்கல் யாண நலங்கிடல்: -சும்மாவா!
ஆண்டாள் திருப்பாவை ஐயா(று) உரைப்போர்கள்
வேண்டார் கரவரம் வேறு’’….
‘’மாரி மலைச்சிங்கம் மீது திருப்பாவை
கூறிய கோதையார் காப்பிருக்கு, -தேரினில்
ஆகுலம் தீர்க்கவன்று அர்சுனர்க்கு கீதைசொல்
கோகுலத்தான் காப்பதற்கு காப்பு’’….
“வேண்டாத மூப்பினை வாலிபத்தில் ஏற்றுப்புள்
கீண்டானைக் காதலிக்க கோதையாய் -ஆண்டாளாய்,
ஆனாளோ அவ்வை அதனால்தான் பாசுரங்கள்
தேனாய் இனிக்கின்ற தோ”!….
பக்தீயில் மூழ்கும் பிராட்டிஅச்(கோதை பிராட்டி), சிங்கத்தை
பத்தி எரியும்தீ பூவாகி -சுத்திவர,
மீறிய நஞ்சும் மிதமாய் அமிழ்தாகும்
சூரியன்மேல் வைப்பாரோ சூடு !….கிரேசி மோகன்….!