கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’’பாற்கடல் பள்ளி, பரமபத சோபானர்
நூற்கடல்நா லாயிர நாயகர், -பாற்குடல்
கன்றுகள் மேய்த்தவர், கண்ணனென் காதலர்,
என்றுமவர் கேள்வர் எனக்கு’’…..!
கேள்வர் -கணவர்
எங்கிருந்தோ வந்தென் இதயம் புகுந்தோனை
சங்குசக்ர சார்ங்கரை சாமியை, -சிங்கத்தை,
முன்நீர் கடைந்த முராரி, இடையனென்(று)
எண்ணியே மாந்தாள் இவள்(ஆண்டாள்)’’….!
‘மால்பிடித்தக் கண்ணனின் கால்பிடித்தக் கோதையின்
நூல்படித்து நோன்பினை நோற்றிடுவோம் : -பால்வடிக்கும்
ஆவினம் மேய்த்தன்று ஆயர் குலம்காத்த
வாவிதான் பாலாழி விஷ்ணு’’….
‘’பறவைகளும் தூங்கும் பனிமார் கழியில்,
கறவைகள் பின்சென்று கானச் , -சிறையில்,
பிறவைகள்(otherthings) விட்டொழித்து, புல்லாங் குழலின்
சரணத்தில் பல்லவியாய் சேர்’’….
“கீதைக்(கு) இணையான ,கோதை திருப்பாவை
போதை தலைக்கேற புள்ளேறி -தாதை
பெரியாழ்வார் இல்லம் பறந்துபோய் கேட்டான்
தரியாஓய்! பெண்ணை தனக்கு”….கிரேசி மோகன்….!