மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++

unnamed

அடடா, தனித்துப் போன மனிதர்

அனை வரையும் நோக்கு !

அடடா, தனித்துப் போன மனிதர்

அனை வரையும் நோக்கு !

திருமணம் நடந்த கிறித்துவக் கோயிலில்

எடுக்கிறாள் அப்பம் ஒன்றை

அப்பாவிக் கிழவி !

கனவுகளுடன் வாழ்பவள் !

காத்துக் கிடப்பாள் முகம் காட்டி

கதவருகே

பாத்திர மொன்றை வைத்து !

யாருக் காக அது ?

எங்கிருந்து வருவாரோ

தனித்துப் போன மனிதர் எல்லாம் ?

எதனைச் சேர்ந்தவர்

தனித்துப் போன அனைவரும் ?

புனிதர் பாதிரியார் போதனை களை

கேட்பார் யாருமில்லை !

நெருங்கி

வருவார் யாருமில்லை !

பாரங்கே அந்த மனிதனை !

கிழிந்த போர்வையை

இருட்டிலே

தைத்துக் கொண்டி ருக்கிறான் !

எவரு மில்லை அருகில் !

கவலைப் படுவது யார் ?

அன்றைய நாளில்

கிழவி செத்துப் போனாள்

கிறித்துவ ஆலயத்தில் !

புதைக்கப் பட்டாள் பெயருடன்;

யாரும் வரவில்லை !

கை மண்ணை துடைத்து பாதிரியார்

புதை பூமியில் நடந்தார் !

யாரையும் காப்பாற்ற வில்லை !

எங்கிருந்து வருகிறார்

தனித்துப் போனவர் மனிதர் ?

எதனைச் சேர்ந்தவர்

தனித்துப் போன மனிதர் ?

++++++++++++++

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *