மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++

unnamed

இன்று ஒரு முகம் கண்டேன்

கண்ட பொழுதை மறக்க முடியமா ?

இருவரும் சந்தித்த இடத்தை

மறக்க இயலுமா ?

எனக்குத் தகுதி யானவள் அவளே;

எமது சந்திப்பை

இந்த உலகம் அறிய வேண்டுமென

விழைபவன் நான்.

வேறோர் நாளெனின் நினைவில் கொள்ளேன்.

தெரியாமல் போகும்.

இன்றென் கனவில் தோன்றுவாள் !

வீழ்வேன் காதலில் ! ஆம் நான்

வீழ்வேன் காதலில் !

மீண்டும் என்னை அழைக்கிறாள்

மறுபடி !

இதுபோல் வேதனை இதுவரை

எனக்கில்லை !

தனித்துக் கிடந்தேன் !

சிலவற்றை நான் இழந்தேன் !

மற்ற பெண்டிரை நானினி நோக்கேன் !

உன்னைப் போல் இல்லை

அப்பெண்டிர்;

மீண்டும் என்னை விளிக்கிறாள்

மறுபடி !

வீழ்ந்தேன் காதலில் ! ஆம் நான்

வீழ்ந்தேன் காதலில் !

++++++++++++++++++

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *