jaya

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 +++++++++++ 

அந்த வார்த்தை உச்சரி!
கண்ணே!
அந்த வார்த்தை உச்சரி!
வந்திடும் உனக்கு  விடுதலை!
அந்த வார்த்தை சொல்லிச் சொல்லி
என்னைப் போல இருந்திடு !
சிந்திக்கும் எனது வார்த்தையை
முந்தி நீயும் சொல்லிடு!

காதலென்று
அந்த வார்த்தை உன்
காதில்  பட்ட துண்மையா?
வார்த்தை கேட்டுத் தினம்
துள்ளு தென்மனம்
அள்ளும் அந்திப் பொழுதிலே.

காதலெனும் அந்த வார்த்தை
எனக்கு
ஆதியிலே  புரிய வில்லை !
புரிந்த தின்று
அந்த இனிய வார்த்தையே !

சென்று போன இட மெல்லாம்
செவியில் பட்டது
அந்த இனிய வார்த்தையே !
நல்ல  நூலில் இருந்தது !
தொல்லை நூலில் இருந்தது !
அந்த வார்த்தை
காதலென்று
எந்த நேரம் சொல்லிடு !

உள்ளும் உணர்ச்சி உண்மை யென்று
துள்ளும் எந்தன் நெஞ்சமே!
ஒவ்வொரு மனிதனுக்கும்
ஒளிகாட்டச்
செல்வ தென்பணி யப்பா!
எடுத்துச் சொல்
அந்த வார்த்தை,
வழிகாட்டும்  உனக்கும் எனக்கும்

அந்த வார்த்தை!
எப்போதும்
எந்தன் நினைவில் இருக்குமே!
அந்த வார்த்தை
காதல் ! காதல் !! காதலே !!!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *