”உள்ளம் உருகுதய்யா’’….மெட்டில்….!
——————————————————————————–

 

 

“அருணை முன்னாடி உள் -கந்தன்
கருணைக் கண்ணாடி யுள்
நானாறு முகம் தோன்றும் -நடேசக்
கோனாரு மகன் போன்று
எருமையில் மரணம் செல்லும் -ரமண
மரணம் முடிவில் வெல்லும்

அயனரி அரன் போற்றும் -முருகர்
தயரத ராம் மருகர்
சுந்தரம் பிள்ளையைப்(ரமணர் அப்பா) போல் -வேறு
மந்திரம் இல்லையடா (தொடரலாமா….!)….!கிரேசி மோகன்….!

உள்ளம் உருகுதய்யா -ரமணர்
உள்ளது நாற்பதய்யா
அகந்தை பனைமரக் கள்ளு -ஆன்மச்
சுகம் ‘’தைதையெனத்’’ துள்ளு…..!

நானார் விசாரிப்பு -சாப்பிடும்
ஐயாறு அரிசி உப்பு….
பிணம்சுடு கழியினைப்போல் -உந்தன்
மனம்சுடு வழியினைப்பார்….கிரேசி மோகன்…..!
’’அஷரமணமாலைத் தந்தவர்
இஷணம் வந்திடுவார்
பஷணம் ஆன்மாவைத் -குரு
தஷிணை ‘’நானார்தான்’’….கிரேசி மோகன்….!

அன்னைக்கு ஒரு கோயில் -லஷ்மி(பசு)
ஆவிற்க்கு ஒரு கோயில்…..
கட்டிய ரமண முனி -காலைக்
கட்டிடக் கையில் கனி(ஆன்மக் கனி)….கிரேசி மோகன்….!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *