கடவுளை நம்பியவனும், கடவுளை நம்பாதவனும் சதா கடவுளைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறான். ஒரு நாணயத்தை முன்னால் பார்த்தால் என்ன ? பின்னால் பார்த்தால் என்ன ? இருபுறம் கொண்டது, ஒரு நாணயம். கண்ணின் திரையில் விழும் பிம்பம் தலை கீழாய்ப் பதிவதை மூளை நேராக்கிக் கொள்கிறது. அதுபோல் நம்பினாலும், நம்பாவிட்டாலும், கடவுளை ஒருவன் சதா நினைத்துக் கொண்டிருக்கிறான்.

கடவுள், நம்பியவனை தழுவிக் கொள்வதும் இல்லை. நம்பாதவனை விலக்குவதும் இல்லை. ஹாக்கிங் எப்போதும் கடவுள் இல்லை என்றும், கடவுளுக்கு வேலை இல்லை என்றும் கடவுளை ஆழமாகத் தெரிந்தவர்போல் காட்டிக் கொள்வார். இளவயதிலேயே சீக்கிரம் மரிப்பார் என்று மருத்துவர் முன்னறிவித்தார். மாறாக அவர் 76 வயது வரை அவர் ஆயூள் எப்படி நீடித்தது ? துன்பத்தில் உழன்றாலும், கடவுள் திட்டமிட்டபடி, அவர் ஆயுள் நீண்டு காலவெளியில் கருந்துளை, பெருவெடிப்பு பற்றி பல புதிய விளக்கங்கள் தந்தார்.

சி. ஜெயபாரதன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *