சுப்ரபாரதிமணியனின் நாவல் “ கோமணம் “ மலையாளத்தில்

0

 

சுப்ரபாரதிமணியனின் நாவல் “ கோமணம் “ மலையாளத்தில் ‘ஹரா ஹரோ ஹரா “ என்ற தலைப்பில் வெள்ளியன்று கொல்லம் ( கேரளா) பிரஸ் கிளப்பில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்படடது. மற்றும் நான்கு மலையாள நூல்களும் வெளியிடப்பட்டன. சுப்ரபாரதிமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கலை, இலக்கியம் , நடனம் போன்ற துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினார். அவரின் “ சாயத்திரை “, சுடுமணல் ‘ ஆகிய நாவல்கள் முன்பே மலையாளத்தில் வெளியாகி உள்ளன. ( இவற்றை திருவன்ந்தபுரம் சிந்தா பதிப்பகம் வெளியிட்டுள்ளது ) சுப்ரபாரதிமணியனின் நாவல் “ கோமணம் “ மலையாளத்தில் ‘ஹரா ஹரோ ஹரா “ என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருப்பவர் கன்னனூரைச்சார்ந்த ஷாபி செருமாவிலயி. இதை வெளியிட்டிருப்பது யுவமேளா பதிப்பகம், கொல்லம், கேரளா. இதன் அதிபர் பதிப்பாளர் கொல்லம் மது 35 ஆண்டுகளாக யுவமேளா பதிப்ப முயற்சிகளில் உள்ளார். இதுவரை 435 புத்தகங்களை வெளியிட்டுள்ளா. “ கோமணம் “ நாவல் தமிழில் இரு பதிப்புகள் ( 1. முன்னேற்றப்பதிப்பகம், 2. கிழக்குப் பதிப்ப்கம் சென்னை ) வெளியாகி உள்ளன.

சுப்ரபாரதிமணியன் உரையில் ; முன்பு என் சிறுகதைகளை மளையாளத்தில் ஜெயமோகன், ஆற்றூர் ரவிவர்மா , ஷாபி போன்றோரும் நாவல்களை ஸ்டான்லி, ஷாபி ஆகியோரும் மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஜெயகேரளம் இதழில் “ ஒவ்வொரு ராஜகுமாரிகளுக்குள்ளும் “ சிறுகதையை 1986 ல் ஜெயமோகன் மொழிபெயர்த்த போது அக்கதையின் தன்மையும் சூழலும் கேரளசூழலோடு இயைந்து இருப்பதை ஆற்றூர் ரவிவர்மா போன்றோர் குறிப்பிட்டிருக்கிறார்கள். கோமணம் நாவலில் பழனி பாதயாத்திரை அனுபவங்கள் கேரள மக்கள் பழனிக்கு அதிக அளவில் செல்பவர்கள் என்ற் அளவில் கேரளா மக்களின் வாழ்க்கையோடு இணைந்த்து என்ற அளவில் இந்நாவல் விரைவில் மலையாளத்தில் வெளிவ்ந்திருக்கிறது. பதிப்பாளர் மது இது பாதயாத்திரையை முன்வைத்து சாதாரண மக்களின் இயல்புகள், கேள்விக்குறியாக்கப்படும் மதம் சார்ந்த விசயங்களுக்காக கேரள இயல்போடு வெகுவாக இயைந்து வருவதால் உடனே பதிப்பிப்பதாகச் சொன்னார். சமூக சூழலியல் விசயங்கள் படைப்பிலக்கியத்திற்குள் வர வேண்டிய முக்கியத்துவத்தை நோக்கம் நிறைவேற்றுகிறது. .இலக்கியத்தின் பயன்பாடு அது சமகாலப் பிரச்சினைகளைப் பேசுவதில் இருக்கிறது. இல+க்கிய ரசனை என்பதை மீறி சமூக சூழலியல் அக்கறை வெளிப்பாட்டை படைப்பிலக்கியத்தில் முக்கியத்துவப்படுத்துவது என்பது இன்றைக்கு எழுத்தாளர்களுக்கு உள்ள முக்கிய கடமையாகும். என்றார் .

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *