விடியலை நோக்கிப் புறப்படு

0

ஆ. செந்தில் குமார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

இளைஞனே!
உன்னில் உறங்கும் ஆற்றல் உலகளவு -அது
உன்னுள் உறங்கிப் பயனென்ன?

உன்னை
நசுக்கும் வலியிங்கு ஏராளம் – அதை
நறுக்கிக் களைந்து வெளியே வா!

உன்
நாடு நலிந்து மெலிந்து போவதனை
வேடிக்கை பார்த்து நிற்காதே!

உன்
உள்ளத்தின் அச்சத்தை அறவே தவிர்!
உலகாளும் வல்லமை உனக்குண்டு!

நீ
சோம்பித் தூங்கி கழித்தது போதும்!
சொக்கும் கண்ணைத் திற!

நீ
விட்டில் பூச்சியாய் வீழ்ந்தது போதும்!
வீரு கொண்டு எழு!

இளைஞனே!
விடியலை நோக்கிப் புறப்படு – உலகு
வியக்கும் வண்ணம் செயல்படு!!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *