இராணுவ வீரர்களின் தற்கொலை?

0

பவள சங்கரி

 

எல்லைப் புறங்களில் பணியாற்றும் பாதுகாப்புப் படையினர்கள், பணியில் இறப்பதைவிட தற்கொலை செய்து இறப்பது அதிகமாக உள்ளதாம். இந்தப்போக்கு 2011இல் 100 பேர் பணியில் இறந்தால், தற்கொலை செய்து இறந்தவர் எண்ணிக்கை 110 ஆக இருந்தது. ஆனால் 2016/17 களில் இந்த நிலை பன்மடங்கு அதிகரித்து பணியில் இறப்பவர்கள் எண்ணிக்கை 700 ஆகவும் தற்கொலை செய்து இறப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக சுமாராக 950 ஆக உள்ளது. இந்த தற்கொலைக்கான காரணங்கள், குடும்பத்தை விட்டு வெகு நாட்கள் பிரிந்திருப்பதால் ஏற்படும் மன உளைச்சல் என்று கூறப்படுவது கருத்தில் கொள்ளவேண்டியது. அரசு இந்தப் பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு இதற்கான சரியான தீர்வைக் காண்பதுதான் நாட்டின் பாதுகாப்பிற்கு உகந்தது என்பதை உணர வேண்டும்!

இராணுவத்திலிருந்து சமீபத்தில் சுமாராக 5000 வீரர்கள் ஓய்வு பெற்றுள்ள நிலையில் புதிதாக வீரர்கள் சேரவில்லை என்று தலைமைத் தளபதி கூறியுள்ளது வேதனை அளிக்கக்கூடியது. அரசுப் பணிகளில் சேர விரும்புபவர்கள், குறிப்பிட்ட காலங்கள் நம் இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பதை சட்டமாக்குவதுதான் இதற்கான சரியான தீர்வாக இருக்க முடியும். மேற்கத்திய நாடுகளில் இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கத்திய நாடுகளில் பொது மக்கள் அனைவரும் இரண்டு ஆண்டுகளாவது இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 
இலண்டன் மாநகரின் பட்டத்து இளவரசர் என்றாலும், அமெரிக்காவின் குடியரசுத் தலைவரின் மகன்களாக இருந்தாலும் அவர்கள் கட்டாயம் இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பதும் நாம் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி!
 
இந்தியக் குடிமக்களும் இது போன்று இராணுவத்தில் பணியாற்ற கட்டாயமாக்கப்பட வேண்டியது அவசியம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *