ஆண்டுக்கு ஆண்டு புது பெயருடன் பிறக்கின்றாய்

அறுபது எண்ணிற்குள் அடங்கி வருகின்றாய்

விளம்பி என்ற பெயருடன் பிறக்கின்றாய்

நாங்கள் விரும்பியதை தர மறுக்கின்றாய் !

புத்தாண்டிற்கு ஓர் தோரணம் கட்டுவோம்

தமிழரிடையே ஒற்றுமை எனும் பாலம் அமைப்போம்

ஆட்சியாளர்கள் அடிமைத்தனத்தை ஒழித்திடுவோம்

நீதி,நியாத்தை என்றும் நிலை நாட்டிடுவோம் !

நீரின்றி அமையாது இவ்வுலகம் என அறிந்ததே

விவசாயம் நீரின்றி அழிவதும் எல்லோர்க்கும் தெரிந்ததே ,

வாடிய பயிரை கண்டு வாடிய நந்தனாரே

மனம் மாறாத தன்மையுடைய ஆட்சியாளர்களே !

வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே அறிவுடைமை

ஒன்று கூடி செயல் படுத்துவோம் நதிநீர் மேலாண்மை

எங்கே சென்றிடும் காலம், அது நம்மை வாழவைக்கும்

விளம்பி ஆண்டில் அடையவேண்டியதை அடைந்திடுவோம் !

ரா.பார்த்தசாரதி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *