விளம்பியே விரும்புவதை தா !
ஆண்டுக்கு ஆண்டு புது பெயருடன் பிறக்கின்றாய்
அறுபது எண்ணிற்குள் அடங்கி வருகின்றாய்
விளம்பி என்ற பெயருடன் பிறக்கின்றாய்
நாங்கள் விரும்பியதை தர மறுக்கின்றாய் !
புத்தாண்டிற்கு ஓர் தோரணம் கட்டுவோம்
தமிழரிடையே ஒற்றுமை எனும் பாலம் அமைப்போம்
ஆட்சியாளர்கள் அடிமைத்தனத்தை ஒழித்திடுவோம்
நீதி,நியாத்தை என்றும் நிலை நாட்டிடுவோம் !
நீரின்றி அமையாது இவ்வுலகம் என அறிந்ததே
விவசாயம் நீரின்றி அழிவதும் எல்லோர்க்கும் தெரிந்ததே ,
வாடிய பயிரை கண்டு வாடிய நந்தனாரே
மனம் மாறாத தன்மையுடைய ஆட்சியாளர்களே !
வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே அறிவுடைமை
ஒன்று கூடி செயல் படுத்துவோம் நதிநீர் மேலாண்மை
எங்கே சென்றிடும் காலம், அது நம்மை வாழவைக்கும்
விளம்பி ஆண்டில் அடையவேண்டியதை அடைந்திடுவோம் !
ரா.பார்த்தசாரதி